சிக்கலோ சிக்கல்.. எப்படி சிக்கியுள்ளார் பாருங்க ப.சிதம்பரம்.. திகார் சிறைக்கு அனுப்ப வாய்ப்பு?
Recommended Video
டெல்லி: கடுமையான சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம். என்றோ பதியப்பட்ட ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு, தற்போது அவரது கழுத்தை சுற்றும் பாம்பாக மாறி விட்டது.
ஆமாம்.. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி வீட்டின் சுவரை ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தை கைது செய்தது முதல், இதுவரை அவர் தொடர்ந்து விசாரணை அதிகாரிகளின் பிடியில் தான் சிக்கி உள்ளார்.
சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து வந்த நிலையில், சிபிஐ கேட்டபடி அவரை கஸ்டடியில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அமலாக்கத்துறை
சிபிஐ பிடியில்,15 நாட்கள் விசாரணைக்கு பிறகு கண்டிப்பாக சிதம்பரம் வெளியே வருவார், என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை சிபிஐ போலவே அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது. அமலாக்கத் துறையும் சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்ற முயற்சியில் உள்ளது.

சரியான பாதை
எனவே உச்சநீதிமன்றத்தில் ப சிதம்பரம் சார்பில், முன்ஜாமின் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த முன்ஜாமீன் மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்ஜாமீன் என்பது அடிப்படை உரிமை கிடையாது என்றும், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு சரியான பாதையில்தான் சென்று கொண்டு இருக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திகார் ஜெயில்
எனவே சிபிஐ காவல் முடிவடைந்ததும், அமலாக்கத் துறை தனது காவலில் சிதம்பரத்தை எடுத்து விசாரிக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபரை மீண்டும் கைது செய்ய தேவை இல்லை. அதற்கு பதிலாக ஒரு சிறை வாரண்ட் பிறப்பித்து சிதம்பரத்தை சிறையில் அடைக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் சிதம்பரம் திகார் ஜெயிலில் அடைக்க படுவது உறுதி.

சிக்கல்கள்
இதுவரை இழுபறியாக இருந்த, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திடீரென வேகம் பிடித்து, அடுத்தடுத்து சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளார் சிதம்பரம். அனைத்து வாசல்களும் அவருக்கு, அடைக்கப்பட்டுள்ளன. சிக்கலுக்கு மேல் சிக்கலில் சிக்கியுள்ளார் சிதம்பரம் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications