ப.சி. வெளிநாடு தப்பி செல்லமாட்டார்.. வேண்டுமானால் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நாங்கள் ரெடி.. கபில் சிபல்
Recommended Video
டெல்லி: முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் என வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் செய்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ரூ 305 கோடி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மீது அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளது. சிபிஐயும் ஒரு தனி வழக்கை பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
இந்த நிலையில் அவர் கடந்த மாதம் 16-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து நவம்பர் 13-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத் துறை
இதனிடையே சிபிஐ வழக்கில் சுப்ரீம் கோர்ட் அவருக்கு கடந்த மாதம் 22-ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. எனினும் அவர் அமலாக்கத் துறை காவலில் இருப்பதால் அவரால் வெளியே வரமுடியவில்லை. இந்த நிலையில் அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
இந்த மனு மீது நீதிபதி சுரேஷ் குமார் கெயித் அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது ப சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் தன் தரப்பு வாதங்களை முன் வைத்தார். அவர் கூறுகையில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த பதில் மனுவில் சிதம்பரம் சாட்சியங்களை கலைக்க முயற்சித்ததாக ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எங்கும் செல்லமாட்டார்
இது மிகவும் தவறானதாகும். அவர் எங்கும் தப்பிச் செல்லமாட்டார். அவருடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நாங்கள் தயாராக உள்ளோம். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என கோரினார். இது தொடர்பான விசாரணை இன்றும் நடக்கிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications