Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பன்றிக்கு லிப் ஸ்டிக்! பின்லேடனும் பாகிஸ்தான் ராணுவ தளபதியும் ஒன்றுதான்.. Ex அமெரிக்க அதிகாரி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த செவ்வாய்க்கிழமை காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் மிக மோசமான தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. இதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இந்தத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானையும் அந்நாட்டு ராணுவத் தளபதி அசிம் முனீரையும் பென்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்றும் மைக்கேல் ரூபின் சாடியுள்ளார்.

காஷ்மீரில் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நேற்று முன்தினம், செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் மிக மோசமான தாக்குதலை நடத்தினர். அப்பாவி சுற்றுலாப் பயணிகளை அவர்கள் குறிவைத்துச் சுட்டுத் தள்ளினர். இந்தச் சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். ஒட்டுமொத்த நாட்டையும் இந்தச் சம்பவம் உலுக்குவதாக இருக்கிறது.

Pahalgam Attack Ex-US Officials Draw Parallel Between Osama Bin Laden and Pakistan Army Chief

அசிம் முனீர்

இதற்கிடையே பென்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் பாகிஸ்தான் ராணுவம் குறித்தும் அந்நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனீரை வெளுத்து வாங்கியுள்ளார். பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீரை மறைந்த அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட பென்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின், 26 பேரைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குப் பங்கு இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிகாரி

இது தொடர்பாக ரூபின் மேலும் கூறுகையில், "முனீருக்கும் பின்லேடனுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கிறது.. முனீர் ஒரு அரண்மனையில் வசிக்கிறார். பின் லேடன் ஒரு குகையில் வசித்து வந்தார். மற்றபடி இருவரும் ஒரே வேலையைத் தான் செய்கிறார்கள். பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானைப் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக அறிவிக்க வேண்டும். அசிம் முனீரை பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும். அதுவே பஹல்கான் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

பன்றிக்கு லிப் ஸ்டிக்

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் ஏதோ தன்னிச்சையாக நடந்த விஷயம் எனச் சொல்லிச் சமாளிக்க முடியாது. அது பன்றிக்கு லிப் ஸ்டிக் போடுவது போல ஏற்க முடியாது சமாளிப்பு.. எப்போது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதயும் நாம் பார்க்க வேண்டும். முன்பு இப்படித் தான், பில் கிளிண்டன் இந்தியா சென்றபோது பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. அதேபோல இப்போது துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்தியா சென்றுள்ள போது தாக்குதல் நடத்தியுள்ளனர். முக்கிய தலைவர்களின் பயணத்தின் போது கவனத்தைத் திசைதிருப்பவே பாகிஸ்தான் விரும்புவதாகத் தெரிகிறது" என்று வெளுத்து வாங்கினார்.

இந்தியா பதிலடி

பைசரன் புல்வெளியில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதற்கிடையே பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் விதமான இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக 1960ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும், எல்லை தாண்டிய தாக்குதல் என்பதால் அட்டாரி எல்லையை உடனடியாக மூடுவதாகவும் அறிவித்தார். மேலும், பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப்படும் என்று ன வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்திரி கூறினார்.

சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்குப் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், தற்போது இத்திட்டத்தில் இந்தியாவில் உள்ள எந்தவொரு பாகிஸ்தானியரும் 48 மணிநேரத்தில் வெளியேற வேண்டும் என வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்திரி அறிவித்தார். மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வசிக்கும் பாதுகாப்பு, ராணுவம், கடற்படை மற்றும் விமான ஆலோசகர்கள் ஒரு வாரத்தில் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+