இந்திய தூதரை திருப்பி அனுப்புகிறது.. இந்தியாவுடான அனைத்து ராஜாங்க உறவுகளையும் நிறுத்த பாக். முடிவு
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் சட்ட பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு பதிலடியாக இந்தியாவுடனான ராஜாங்க ரீதியான அனைத்து உறவுகளையும் நிறுத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி இந்திய தூதரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் பாகிஸ்தான், தனது நாட்டு தூதரை திரும்ப அழைத்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பிரச்சனை நிலவி வருகிறது. சுதந்திரம் அடைந்த பின் இருந்தே நிலவும் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மோடி தலைமையிலான இந்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

இதன்படி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. இதை நாடாளுமன்றத்திலும் சட்டமாக நிறைவேற்றியுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட அனைத்து சிறப்பு சலுகைகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தோடு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இருயூனியன் பிரதேசங்களாக உருமாறுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் இந்தியா செய்து வருவது அப்பட்டமான மனிதஉரிமை மீறல் என்றும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது சட்டவிரோதம் என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இந்தியா செய்த நடவடிக்கைக்கு எதிர்வினையாக பாகிஸ்தான் அதிரடியான சில முடிவுகளை எடுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரோஷி, பாதுகாப்புத்துறை அமைச்சர் பர்வேஷ் கட்டாக் மற்றும் பாகிஸ்தான் அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் இன்று இஸ்லாமாபாத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் 370வது அரசியல் சாசன பிரிவு ரத்து செய்யப்ப்டடதை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடுவது என முடிவு செய்யப்பட்டது. அத்துடன் இந்தியாவுடனான ராஜாங்க ரீதியான அனைத்து உறவுகளையும் நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியாவை திருப்பி அனுப்ப உள்ளது. அத்துடன் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக இந்த மாதம் பொறுப்பேற்பதாக இருந்த மொயின் உல் குக்கை இந்தியாவுக்கு அனுப்புவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இந்தியாவுடனான வர்த்தக உறவு ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது.
-
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications