பாக். பதிலடி முயற்சி.. குஜராத் எல்லைக்குள் புகுந்த ட்ரோன் விமானம்! சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்
Recommended Video

டெல்லி: இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் நாட்டின் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை விமானங்கள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தின. இந்த தாக்குதல் நடந்து சுமார் 3 மணி நேரம் கழித்து, அதாவது காலை 6.30 மணியளவில் பாகிஸ்தான் நாட்டின் ட்ரோன், உளவு விமானம், குஜராத்தின் கட்ச் பகுதிக்குள் நுழைந்தது.

இதை தக்க நேரத்தில் கண்டுபிடித்த இந்திய பாதுகாப்புப்படை, பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்தியது. இந்தியாவின் தாக்குதலுக்கு, உடனடியாக பாகிஸ்தான் நடத்திய பதிலடி முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
ட்ரோன் எனப்படுபவை சிறிய வகை உளவு கருவிகள் ஆகும். ஆளில்லாமல் பறக்கவிடப்படும் இவை, பறக்கும் இடங்களில் உள்ள நிலைமையை புகைப்படமாக எடுத்து அனுப்பும் திறமை கொண்டவை. இந்திய எல்லை பாதுகாப்பை உளவு பார்க்க இவை அனுப்பப்பட்டிருக்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications