புல்வாமா தாக்குதல்.. செல்லாது, செல்லாது.. இந்தியாவிடம் அடம் பிடிக்கும் பாகிஸ்தான்
Recommended Video

டெல்லி: புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஈடுபட்டதற்கான கூடுதல் ஆதாரங்கள் வழங்கும்படி, அந்த நாடு இந்தியாவிடம் கோரியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டாலும், பாகிஸ்தான் அரசு இதை மறுத்து வருகிறது.

இந்த நிலையில்தான், புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா கொடுத்த தகவல்களை பாகிஸ்தான் பரிசீலித்து, தனது விசாரணை அறிக்கையின் முதல்பாகத்தை இந்தியாவிடம் அளித்துள்ளது.
வழக்கம்போலவே, இப்போதும், இந்தியா இன்னும் போதிய ஆதாரம் கொடுக்க வேண்டும் என்றும், இந்தியா கூறியதை போல பாகிஸ்தானில் 22 தீவிரவாத முகாம்கள் இல்லை எனவும்தான் பாகிஸ்தான் தெரிவித்துள்ளதே தவிர ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளை செய்யவில்லை.
இந்தியாவிடம் விசாரணை தகவலை ஷேர் செய்த தகவலை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்தியா குறிப்பிட்ட 22 இடங்களிலும் தீவிரவாத முகாம்கள் இல்லை. தேவைப்பட்டால், இந்திய அதிகாரிகள் அந்த இடங்களை பார்வையிட பாகிஸ்தான் ஒத்துழைக்கும். கைது செய்யப்பட்ட 54 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும், புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications