Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா.. சுவிட்சர்லாந்து காதலியை பார்க்க..பாகிஸ்தான் சென்ற ஐடி ஊழியர்..2 ஆண்டுக்கு பின் விடுதலை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தனது ஆன்லைன் காதலியைச் சந்திக்க 2 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் வழியாக சுவிட்சர்லாந்து செல்ல முயன்றதால் கைது செய்யப்பட்ட, ஹைதராபாத் இன்ஜினீயரை பாகிஸ்தான் தற்போது விடுதலை செய்துள்ளது.

காதலிக்காகக் கடல் தாண்டி செல்லும் நாயகர்களை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி காதலியைத் தேடி எல்லை தாண்டி சென்றதால் கைது செய்யப்பட்டவர் தான் வைந்தம் பிரசாந்த்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்த வைந்தம் பிரசாந்த். 31 வயதாகும் இவர் அங்குள்ள பிரபல நிறுவனத்தில் ஐடி இன்ஜினீயராக இருந்தார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு திடீரென மாயமானார்.

பாகிஸ்தானில் கைது

பாகிஸ்தானில் கைது

அதைத் தொடர்ந்து இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். இவருடன் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தரிலா என்பவரும் கைது செய்யப்பட்டனர். முறைகேடாக எல்லை தாண்டி பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டாகப் அந்நாட்டு ராணுவம் தெரிவித்திருந்தது. முதலில் இவர்களை இந்திய நாட்டின் உளவாளிகள் என்றே பாகிஸ்தான் ராணுவம் கருதியது.

சுவிட்சர்லாந்து காதலி

சுவிட்சர்லாந்து காதலி

ஆனால், அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் தான் சுவாரஸ்ய தகவல் அந்நாட்டு ராணுவத்திற்குத் தெரியவந்தது. வைந்தம் பிரசாந்த்திற்கு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பெண் ஒருவருடன் ஆன்லைனில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அது அப்படியே காதலாக மாறியுள்ளது. இதனால் தனது காதலியைச் சந்திக்க வாரணம் ஆயிரம் சூர்யாவைப் போல கிளம்பிவிட்டார். ஆனால், என்ன விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாமல் புறப்பட்டு விட்டார்.

பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் ராணுவத்திற்கு முதலில் இவர் கூறிய கதைகள் நம்பும் வகையில் இல்லை. இருப்பினும், வைந்தம் பிரசாந்த் இதையே திரும்பத் திரும்ப கூறி வந்தார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் விசாரணை மேற்கொண்டனர். அதில் வைந்தம் பிரசாந்த் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை எனத் தெரிந்ததும் ஷாக் ஆகிவிட்டது பாகிஸ்தான் ராணுவம்.

வீடியோ வைரல்

வீடியோ வைரல்

கடந்த 2019இல் வைந்தம் பிரசாந்த்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் அவர் நலமாக இருப்பதாகவும் முறையான ஆவணம் இல்லாததால் பாகிஸ்தான் காவலர்களால் கைது செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார்.மேலும், தான் இந்தியாவுக்குத் திரும்பத் தேவையான நடவடிக்கைகளை இந்திய தூதரகம் எடுத்து வருவதாகவும் விரைவில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ அப்போது இணையதளத்தில் வைரலானது.

இந்தியா திரும்பினார்

இந்தியா திரும்பினார்

இதையடுத்து அவரை இந்தியாவுக்கு விரைவாக அழைத்து வரும் பணிகளில் இந்திய தூதரகம் இறங்கியது. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இதில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமலேயே இருந்தது. இந்நிலையில், வைந்தம் பிரசாந்த், இன்று வாகா எல்லையில் இந்தியா ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் அதன் பிறகு ஹைதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டிற்குத் திரும்புவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த அவர், சுவிட்சர்லாந்து பெண்ணை காதலிப்பது உண்மை தான் என்றும் இருப்பினும் அது தனிப்பட்ட விவகாரம் என்றும் தெரிவித்தார்,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+