மூச் விடமுடியாத பாகிஸ்தான்.. மும்பையில் 172 பேரை உயிரை குடித்த ஹபீஸ் சயீத் மகன் 'சடலம்' கிடைத்தது!
டெல்லி: மும்பை மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி 172 பேரின் உயிரைக் குடித்த பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் மகன் கமாலுதீன் சயீத் சடலமாக மீட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் செயல்படக் கூடிய இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத சதித் தாக்குதல்களை நடத்தும் ஜமாத் உல் தாவா என்ற பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர் ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா என்ற அமைப்புடன் இணைந்தது இது.

மும்பை தாக்குதலின் மூளை: 2008-ம் ஆண்டு மும்பையை ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்ட பயங்கரவாத தாக்குதலின் மூளையே இந்த ஹபீஸ் சயீத். மும்பை தாக்குதலில் மொத்தம் 172 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தேடப்படுகிற பயங்கரவாதி ஹபீஸ் சயீத். சர்வதேச நாடுகளாலும் கொடூரமான பயங்கரவாதி என பிரகடனம் செய்யப்பட்ட நபர்.
ஹபீஸ் சயீத் மகன் மாயம்: பாகிஸ்தான் நீதிமன்றத்தால் பயங்கரவாத செயல்களுக்காக 31 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவராக சொல்லப்படுகிற ஹபீஸ் சயீத், அந்நாட்டில் சுதந்திரமாக உலவுகிறார் என்பது சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் தகவல். இந்த ஹபீஸ் சயீத் மகன், கமாலுதீன் சயீத் சில நாட்களுக்கு முன்னர் பெஷாவர் நகரில் இருந்து காணாமல் போனார். ஆனால் இது பற்றி பாகிஸ்தான் தரப்பு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறது.

ஹபீஸ் சயீத் மகன் உடல் மீட்பு?: தற்போது பெஷாவரில் கமாலுதீன் சயீத் உடல் மீட்கப்பட்டிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கமாலுதீன் சயீத் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானால் இந்த விவகாரம் குறித்து பகிரங்கமாக எதனையும் தெரிவிக்க முடியாத நெருக்கடியில் சிக்கியிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
போட்டு தள்ளியது யார்?: கமாலுதீன் சயீத்தை பலுசிஸ்தான் தனிநாடு கோரும் அமைப்புகள் அல்லது சர்வதேச புலனாய்வு அமைப்பின் உளவாளிகள் கொலை செய்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே ஹபீஸ் சயீத்தின் வலது, இடது கரங்கள் மர்ம நபர்களால் வேட்டையாடப்பட்டனர். பின்னர் ஹபீஸ் சயீத் வீடு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது ஹபீஸ் சயீத் மகனின் கதையும் முடிக்கப்பட்டுவிட்டது!
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications