Budget 2019: வருமான வரி தாக்கல் செய்ய இனி பான் கார்டு தேவையில்லை
டெல்லி: வருமான வரி தாக்கல் செய்ய இனி பான் கார்டு தேவையில்லை என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வருமான வரி தாக்கல் செய்யும் போது பான் கார்டு அவசியமாகிறது. இந்த நிலையில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது அவர் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ 5 லட்சமாக உயர்த்தினார். இதனால் ஆண்டு வருமானம் ரூ 5 லட்சம் வரை பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை. ரூ 5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும்.
அதுபோல் வருமான வரி தாக்கல் செய்யும்போது பான் கார்டு இனி தேவையில்லை. ஆதார் எண்ணை வைத்தே வரி தாக்கல் செய்ய முடியும்.
ரூ.10 போல் ரூ.20 நாணயம்.. விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!
வரி செலுத்துவதை எளிமையாக்க இந்த நடைமுறை கொண்டு வருகிறோம். 120 கோடி இந்தியர்களுக்கு தற்போது ஆதார் கார்டு உள்ளது. எனவே பான் கார்டு இல்லாதவர்கள் ஆதார் எண்ணை வைத்து வருமான வரி தாக்கல் செய்யலாம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.