Budget 2019: வருமான வரி தாக்கல் செய்ய இனி பான் கார்டு தேவையில்லை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வருமான வரி தாக்கல் செய்ய இனி பான் கார்டு தேவையில்லை என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வருமான வரி தாக்கல் செய்யும் போது பான் கார்டு அவசியமாகிறது. இந்த நிலையில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

Pan card and Aadhar card would be interchangeable, says Nirmala

அப்போது அவர் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ 5 லட்சமாக உயர்த்தினார். இதனால் ஆண்டு வருமானம் ரூ 5 லட்சம் வரை பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை. ரூ 5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும்.

அதுபோல் வருமான வரி தாக்கல் செய்யும்போது பான் கார்டு இனி தேவையில்லை. ஆதார் எண்ணை வைத்தே வரி தாக்கல் செய்ய முடியும்.

வரி செலுத்துவதை எளிமையாக்க இந்த நடைமுறை கொண்டு வருகிறோம். 120 கோடி இந்தியர்களுக்கு தற்போது ஆதார் கார்டு உள்ளது. எனவே பான் கார்டு இல்லாதவர்கள் ஆதார் எண்ணை வைத்து வருமான வரி தாக்கல் செய்யலாம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+