‛தீவிரவாதி’.. நாடாளுமன்றம் என்ன சொற்களின் குப்பை தொட்டியா? பாஜக எம்பியால் கொதித்த வைரமுத்து
டெல்லி: பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலியை நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் தீவிரவாதி என பாஜக எம்பி ரமேஷ் பிதுரி விமர்சனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இத்தகைய சூழலில் தான் கவிதை நடையில் பாஜக எம்பி ரமேஷ் பிதுரியின் செயலுக்கு கவிஞர் வைரமுத்து கண்சிவந்து கொதித்துபோய் உள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18 ம் தேதி தொடங்கியது. நாடாளமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா என்பது இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 5 நாட்கள் சிறப்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் மசோத பிரச்சனையின்றி நிறைவேறியதால் ஒரு நாளுக்கு முன்பே முடித்து கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தான் கடைசி நாளான கடந்த 21ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் (லோக்சபா) சந்திரயான்-3 வெற்றி தொடர்பான விவாதம் நடந்தது. இதில் ஒவ்வொரு கட்சி எம்பிக்களும் பங்கேற்று பேசினார். மேலும் மத்திய அரசு, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த வேளையில் டெல்லி தெற்கு நாடாளுமன்ற தொகுதி பாஜக எம்பியான ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலியை கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். டேனிஷ் அலியை பார்த்து அவர் தீவிரவாதி என கூறியதோடு இழிவுப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தி அட்டாக் செய்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‛இந்தியா' எம்பிக்கள் சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதினர். மேலும் பாஜக சார்பிலும் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் டேனிஷ் அலி எம்பியை மதரீதியாக பாஜக எம்பி விமர்சித்ததற்கு கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஒரு நாற்சந்திப் பேச்சாளருக்கும்
நாடாளுமன்ற உறுப்பினருக்கும்
சொல்லாட்சியில் வேறுபாடு இருக்கிறது
நாடாளுமன்றம் என்பது
பளபளப்பான
கற்களால் கட்டப்பட்ட
சொற்களின் குப்பைத்தொட்டியல்ல
நாட்டின் உரிமைக்குரலும்
பண்பாட்டின் பெருமைக்குரலும்
தெறித்துக் கிளம்பும் திருத்தலம்
அவையல் கிளவிகளை
எவர் மொழிந்தாலும்
எவர்மீது பொழிந்தாலும்
அவரை அவைத்தலைவர்
ஒறுத்து ஒதுக்க வேண்டும்
நாடு உங்களை கவனிக்கிறது;
நாட்டை உலகம் கவனிக்கிறது'' என சாடியுள்ளார்.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’












Click it and Unblock the Notifications