5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது.
Recommended Video

டெல்லி: இந்திய அரசியல் களமே சூடுபிடித்து கிடக்கும் இந்த நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியது. பின்னர், மறைந்த மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர் நாள் முழுவதும் கூட்டத்தொடர் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
5 மாநில தேர்தல் முடிவுகள் ஒருபுறம் எண்ணப்பட்டு வருகிறது. இந்தநிலையில்தான் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. தேர்தலில் பாஜக தோல்வி முகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விவாதிப்பதற்கும், அலசுவதற்கும், ஆராய்வதற்கும், எக்கச்சக்க விவகாரங்களை எதிர்க்கட்சிகள் கையில் ரெடியாக வைத்திருக்கின்றன.

விவாதங்கள்
ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட ஏகப்பட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் இன்று எழுப்ப பிளான் செய்திருக்கின்றன. அதனால் பார்லிமென்டில் அனல் தெறிக்கும் விவாதங்கள் இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 8
20 அமர்வுகள் இந்த கூட்டம் நடக்க போகிறது. ஒவ்வொரு அமர்வுமே உச்சக்கட்ட பரபரப்பாகதான் இருக்க போகிறது. அந்த அளவுக்கு கையில் விவகாரங்களை வைத்திருக்கின்றன எதிர்கட்சிகள். ஜனவரி 8-ம் தேதிதான் இந்த கூட்டத்தொடர் முடிவடைய போகிறது.

மனித உரிமைகள்
அதுவரை கூட்டத்தொடரில் பேச 23 மசோதாக்களை பரிசீலனைக்கு எடுத்து கொள்ள முடிவாகி உள்ளது. அதாவது முத்தலாக் தடை சட்டத்துக்கு மாற்றான மசோதா, தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மனித உரிமைகள் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவைகள் எடுத்துகொள்ளப்பட இருக்கின்றன.

காங்கிரஸ்
அதே நேரத்தில் 20 புதிய மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. கூடவே 2 மசோதாக்களை திரும்ப பெறப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்படி பார்த்தாலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை காங்கிரஸ் கண்டிப்பாக இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தும்.

ராமர் கோயில்
இதெல்லாம் வெளிப்படையாக தெரிந்தாலும், ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழலையும், ராமர் கோயில் கட்டுவது தொடர்பான விவகாரத்தையும் எழுப்பாமல் இந்த கூட்டத்தொடர் முடியபோவதில்லை.

பஞ்சமே இருக்காது
அதனால் காரசார விவாதங்களுக்கும், அனல்தெறிக்கும் வாக்குவாதங்களுக்கும் இந்த கூட்டத்தொடரில் ஒரு பஞ்சமும் இருக்காது என்றே தோன்றுகிறது.

இரங்கல்
அதன்படி இன்று காலை அவை கூடியது. அப்போது கூட்டத்தொடரில் மறைந்த பிரதமர் வாஜ்பாய் மற்றும் மத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு












Click it and Unblock the Notifications