விவசாய போராட்டத்தின் போது விவசாயிகள் யாரும் பலியாகவில்லை.. நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்
டெல்லி: விவசாய போராட்டத்தின் போது விவசாயிகள் யாரும் பலியாகவில்லை என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர தோமர் நாடாளுமன்ற லோக்சபா அவையில் கடிதம் மூலம் விளக்கம் அளித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் மூன்றாம் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. முதல்நாள் கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் மூன்றும் நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது. விவாதம் எதுவும் இன்றி இரண்டு அவைகளிலும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றபட்டது. இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரண்டு நாட்களாக அவையில் இதனால் கடும் அமளி ஏற்பட்டது. இன்றும் விவசாய போராட்டம் குறித்தும், விவசாய சட்டம் நீக்கம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் கோரிக்கை விடுத்தனர்.

கேள்வி
இந்த நிலையில் இன்று லோக்சபா அவையில் காங்கிரஸ் அவைத்தலைவர் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்திரி விவசாய போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். விவசாய போராட்டத்தின் போது 700க்கும் அதிகமான விவசாயிகள் பலியானார்கள். அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இவர்கள் குறித்த விவரங்களும் அரசு தரப்பிடம் முழுமையாக இல்லை.

நிவாரணம்
இவர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் அரசுக்கு உள்ளதா என்று காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கேள்வி எழுப்பினார். இதற்கு விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர தோமர் அவையில் கடிதம் மூலம் விளக்கம் அளித்தார். அதில், விவசாய போராட்டத்தில் விவசாயிகள் யாரும் பலியாகவில்லை.

கடிதம் பதில்
விவசாயிகள் யாரும் பலியாகாத காரணத்தால் அது குறித்த டேட்டா இல்லை. விவசாயிகள் யாரும் பலியாகாத காரணத்தால் அதை பற்றி இப்போது அவையில் கேள்வி எழுப்ப வேண்டியது இல்லை. இப்போது விவசாய சட்டங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன, என்று அமைச்சர் விளக்கத்தில் குறிப்பிட்டார். இதையடுத்து விவசாய சட்டம் வாபஸ் குறித்து விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

ராஜ்யசபா
இன்னொருபக்கம் ராஜ்யசபாவில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்சபாவில் எம்பிக்கள் அமளி செய்தனர். ராஜ்ய சபா, லோக்சபா நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியை தொடர்ந்து லோக்சபா 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
-
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்?












Click it and Unblock the Notifications