"குடும்பத்தின் கட்சி.. குடும்பத்திற்கான கட்சி.." செங்கோட்டையில் சீறிய பிரதமர் மோடி
டெல்லி: குடும்பத்தால் கட்சி, குடும்பத்திற்கான கட்சி என்பதே எதிர்க்கட்சிகளின் கொள்கையாகும். ஊழலுக்கு எதிராக நான் தொடர்ந்து போராடுவேன், ஊழல்வாதிகளுக்கு எதிராக நான் கடும் நடவடிக்கை எடுப்பதால் எனக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளது என்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பேசினார்.
இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றினார். பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுவது இது 10-வது முறையாகும். தேசியக் கொடி ஏற்றிய பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், அரசின் இலக்குகள் மற்றும் சாதனைகள் குறித்து விரிவாக பேசினார்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகளையும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி கூறுகையில், "எதிர்க்கட்சிகளின் அரசியல் கொள்கை என்பது முழுவதும் குடும்பத்திற்கானது மட்டுமே ஆகும். குடும்பத்தால் கட்சி, குடும்பத்திற்கான கட்சி என்பதே அவர்களின் கொள்கையாகும். ஊழலுக்கு எதிராக நான் தொடர்ந்து போராடுவேன், ஊழல்வாதிகளுக்கு எதிராக நான் கடும் நடவடிக்கை எடுப்பதால் எனக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளது.

ஊழல், திருப்தி படுத்தும் அரசியல், வேண்டியவர்களுக்கு சலுகை வழங்குதல் போன்றவை மக்களின் நாட்டு மக்களின் லட்சியங்களை நசுக்குகிறது. சில அரசியல் கட்சிகள் தங்கள் குடும்ப நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகின்றன" இவ்வாறு பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடி பேசினார்.












Click it and Unblock the Notifications