Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

75 வருடங்களாக இலவசமாகவே ஓடும் ரயில்.. இந்தியாவில் தாங்க.. எந்த ரூட்டில் என்று தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளாக எந்தவித டிக்கெட் கட்டணமும் இன்றி எப்போதும் பயணிகள் இலவசமாக பயணிக்கும் வகையில் ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?.. ஆம்.. இமாச்சல் பிரதேசத்தில் இப்படி கட்டணம் இன்றி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில், சுற்றுலாப் பயணிகள் மட்டும் இன்றி உள்ளூர் மக்களும் அதிக அளவில் பயணித்து வருகிறார்கள்.

ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்தால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும். பொது டிக்கெட்டை வைத்துக்கொண்டு முன்பதிவு பெட்டியில் ஏறினாலும் அபராதம் கட்டுவதோடு நடுவழியில் இறங்கி பொதுப்பெட்டிக்கு மாற வேண்டியிருக்கும். ரயில்களில் பயணிகள் டிக்கெட் எடுத்து பயணிக்கிறார்களா? என்பதை அவ்வப்போது டிடிஆர்களும் உறுதி செய்கிறார்கள்.

train tourism

டிக்கெட் கிடையாது: இதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இந்தியாவில் ஒரு ரயிலில் எந்த வித கட்டணமும் இன்றி இலவசமாக எப்போதும் பயணம் செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மைதாங்க.. இமாசல பிரதேசத்தில் உள்ள பகாரா - நங்கல் இடையே ஓடும் ரயில் தான் கட்டணம் இன்றி 75 வருடங்களாக இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1948 முதல்: 12 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த இரு பகுதிகளுக்கு இடையே இயக்கப்படும் ஒரு ரயிலில் பயணிகள் ஒரு ரூபாய் கூட கட்டணம் செலுத்தாமல் பயணிக்க முடியும். சட்லெஜ் ஆறு மற்றும் சிவாலிக் மலைகளை கடந்து இந்த ரயில் செல்கிறது. 12 கிலோ மீட்டர் தொலைவில் மொத்தம் 6 ரயில் நிலையங்கள் உள்ளன. பங்கரா - நங்கல் அணையை கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கலுக்காக கடந்த 1948-ல் இந்த ரயில் செவை தொடங்கப்பட்ட்து.

தினமும் 800 பேர் பயணம்: முதலில் நீராவி என்ஜின் கொண்ட ரயிலாக இந்த ரயில் இயக்கப்பட்டது. அதன்பிறகு காலத்திற்கு ஏற்ப பல்வேறு மாறுபாடுகளுடன் இந்த ரயில் இயங்கி வருகிறது. இமாசல பிரதேசத்தில் ஓடும் ரயிலில் தினந்தோறும் சுமார் 800 பயணிகள் பயணம் செய்கிறார்கள். ரயிலில் பாரம்பரிய பெருமையை பேணிக்காக்கும் வகையில் இந்த ரயில் இலவசமாகவே 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது.

எப்போது இயக்கப்படுகிறது?: இந்த வழித்தடத்தில் சுற்றிலும் பசுமை மற்றும் நீர்வீழ்ச்சிகள் காணப்படும் எனதால் சுற்றுலாப் பயணிகள் கண்ணுக்கு விருந்தளிக்கும் விதமாக இந்த ரயில் சேவை உள்ளது. இந்த ரயில், நங்கல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.05 க்கு புறப்பட்டு காலை 8.20 மணிக்கு பக்ராவை சென்றடைகிறது. மேலும், ரயில் நங்கலில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4:20 மணிக்கு பக்ரா ரயில் நிலையம் செல்கிறது.

டிக்கெட் பரிசோதகர் கிடையாது: இந்த ரயிலில் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் விரும்பி பயணிக்கிறார்கள். இந்த ரயிலை ரயில்வேக்கு பதிலாக பக்ரா பியாஸ் மேனேஜ்மேண்ட் போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகர் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த ரயிலில் சுற்றுலாப் பயணிகள் மட்டும் இன்றி உள்ளூர் மக்களும் அதிக அளவில் பயணித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+