75 வருடங்களாக இலவசமாகவே ஓடும் ரயில்.. இந்தியாவில் தாங்க.. எந்த ரூட்டில் என்று தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளாக எந்தவித டிக்கெட் கட்டணமும் இன்றி எப்போதும் பயணிகள் இலவசமாக பயணிக்கும் வகையில் ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?.. ஆம்.. இமாச்சல் பிரதேசத்தில் இப்படி கட்டணம் இன்றி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில், சுற்றுலாப் பயணிகள் மட்டும் இன்றி உள்ளூர் மக்களும் அதிக அளவில் பயணித்து வருகிறார்கள்.
ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்தால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும். பொது டிக்கெட்டை வைத்துக்கொண்டு முன்பதிவு பெட்டியில் ஏறினாலும் அபராதம் கட்டுவதோடு நடுவழியில் இறங்கி பொதுப்பெட்டிக்கு மாற வேண்டியிருக்கும். ரயில்களில் பயணிகள் டிக்கெட் எடுத்து பயணிக்கிறார்களா? என்பதை அவ்வப்போது டிடிஆர்களும் உறுதி செய்கிறார்கள்.

டிக்கெட் கிடையாது: இதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இந்தியாவில் ஒரு ரயிலில் எந்த வித கட்டணமும் இன்றி இலவசமாக எப்போதும் பயணம் செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மைதாங்க.. இமாசல பிரதேசத்தில் உள்ள பகாரா - நங்கல் இடையே ஓடும் ரயில் தான் கட்டணம் இன்றி 75 வருடங்களாக இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1948 முதல்: 12 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த இரு பகுதிகளுக்கு இடையே இயக்கப்படும் ஒரு ரயிலில் பயணிகள் ஒரு ரூபாய் கூட கட்டணம் செலுத்தாமல் பயணிக்க முடியும். சட்லெஜ் ஆறு மற்றும் சிவாலிக் மலைகளை கடந்து இந்த ரயில் செல்கிறது. 12 கிலோ மீட்டர் தொலைவில் மொத்தம் 6 ரயில் நிலையங்கள் உள்ளன. பங்கரா - நங்கல் அணையை கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கலுக்காக கடந்த 1948-ல் இந்த ரயில் செவை தொடங்கப்பட்ட்து.
தினமும் 800 பேர் பயணம்: முதலில் நீராவி என்ஜின் கொண்ட ரயிலாக இந்த ரயில் இயக்கப்பட்டது. அதன்பிறகு காலத்திற்கு ஏற்ப பல்வேறு மாறுபாடுகளுடன் இந்த ரயில் இயங்கி வருகிறது. இமாசல பிரதேசத்தில் ஓடும் ரயிலில் தினந்தோறும் சுமார் 800 பயணிகள் பயணம் செய்கிறார்கள். ரயிலில் பாரம்பரிய பெருமையை பேணிக்காக்கும் வகையில் இந்த ரயில் இலவசமாகவே 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது.
எப்போது இயக்கப்படுகிறது?: இந்த வழித்தடத்தில் சுற்றிலும் பசுமை மற்றும் நீர்வீழ்ச்சிகள் காணப்படும் எனதால் சுற்றுலாப் பயணிகள் கண்ணுக்கு விருந்தளிக்கும் விதமாக இந்த ரயில் சேவை உள்ளது. இந்த ரயில், நங்கல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.05 க்கு புறப்பட்டு காலை 8.20 மணிக்கு பக்ராவை சென்றடைகிறது. மேலும், ரயில் நங்கலில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4:20 மணிக்கு பக்ரா ரயில் நிலையம் செல்கிறது.
டிக்கெட் பரிசோதகர் கிடையாது: இந்த ரயிலில் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் விரும்பி பயணிக்கிறார்கள். இந்த ரயிலை ரயில்வேக்கு பதிலாக பக்ரா பியாஸ் மேனேஜ்மேண்ட் போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகர் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த ரயிலில் சுற்றுலாப் பயணிகள் மட்டும் இன்றி உள்ளூர் மக்களும் அதிக அளவில் பயணித்து வருகிறார்கள்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications