கோவிட் தடுப்பூசி.. நேரம், இடம் நீங்களே தேர்வு செய்யலாம் - வாவ் ஐடியா!
டெல்லி: கொரோனா தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ளும் பொருட்டு, பொதுமக்கள் தாங்களே தடுப்பூசி போடும் நேரம், இடத்தை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் என இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக, ஜனவரி 16ம் தேதி முதல் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இதுவரை ஆறு லட்சம் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள, 'கோ-வின்' செயலியில் விண்ணப்பித்துள்ளனர்.
10 நாட்களில் 1.60 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், 69 ஆயிரத்து 27 பேருக்கு மட்டுமே, நேற்று முன்தினம் வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியளவில் திங்கள் நிலவரப்படி, முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் உள்ள 2 மில்லியன் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சிறப்பு வசதி செய்யப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பொதுமக்கள் தாங்களாகவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மையம், நேரம் ஆகியவற்றை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பதிவு செய்து கொள்ள முடியும். தடுப்பூசி போட வேண்டி வயதானவர்கள் வரிசையில் நிற்கும் சிரமங்களை தடுக்கும் பொருட்டு இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது.
தியேட்டரில் படம் பார்ப்பதற்கு மக்கள் ஆன்லைனில் புக்கிங் செய்வது போன்ற அதே நடைமுறை தான் இங்கேயும் இருக்கும். நிச்சயம் இது மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆரோக்ய சேது ஆப், ஹெல்ப்லைன் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு மக்கள் தாங்களாகவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்து கொள்ள முடியும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்,
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications