மகிழ்ச்சியையும், கவலைகளையும் தரும் மத்திய பட்ஜெட்...இவர்கள் என்ன சொல்கிறார்கள்
டெல்லி : இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட் ஜெட் சிலரிடம் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றிருந்தாலும், பலரிடம் அதிருப்தியையும் வேதனையையும் பெற்றுள்ளது.
பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள், ஆதரவு கட்சியினரும் இது சூப்பரான பட்ஜெட், வளர்ச்சிக்கான பட்ஜெட் என புகழ்ந்து வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியினரோ இது ஒன்றும் இல்லாத பட்ஜெட், மக்களுக்கு எதிரான பட்ஜெட், சில மாநிலங்களில் நடக்கப் போகும் சட்டசபை தேர்தலை குறிவைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என குற்றம்சாட்டி வருகின்றனர்.
அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் இப்படி இருந்தாலும், பட்ஜெட்டில் சாதக, பாதகங்களை அனுபவிக்க போகிறவர்கள் சாமானிய மக்களும், துறை சார்ந்தவர்களும் தான். அவர்களின் கருத்து என்ன என்பதை இதில் பார்க்கலாம்.

விவசாயிகள் :
இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டது விவசாயிகளும் தான். விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி ஏதும் அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது.

மூத்த குடிமக்கள் :
75 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இது வரவேற்கதக்கது.

வரி செலுத்துவோர் :
எந்த வரிச்சலுகையும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக வருமான வரியில் எந்த சலுகையும் மாத சம்பளதாரர்களுக்கு வழங்கப்படவில்லை. வருமான வரியில் மாற்றமில்லை என்ற அறிவிப்பு வேதனை அளிக்கிறது.

தொழில் துறையினர் :
வரவேற்கதக்க பட்ஜெட், பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் தொழில் துறையில் முதலீடுகளை பெருக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. 2 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications