குடியுரிமை சட்டம்.. மோடி, அமித் ஷா விளக்கிவிட்டனர்.. கவலை வேண்டாம்.. முதல்வர் பழனிசாமி பேட்டி!
குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கிவிட்டனர், அதனால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை என்று முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கிவிட்டனர், அதனால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை என்று முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து முதல்முறை முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019 நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமான தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு இரண்டு அவைகளிலும் அதிமுக ஆதரவாக வாக்களித்தது. லோக்சபாவில் ஒரு அதிமுக எம்பியும், ராஜ்ய சபாவில் 11 அதிமுக எம்பிக்களும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

முதல் பேட்டி
இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து முதல்முறை முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். அதில், குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பிரதமர் மோடி விளக்கிவிட்டார், அதனால் அதை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை . குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை.இந்தியாவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை.

என்ன சொன்னார்
குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ள எந்த மதத்தினருக்கும் பாதிப்பு இல்லை. இதனால் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் பாதிக்காத வண்ணம் செயல்படுவோம், இலங்கை தமிழர்களுக்கு அதிமுக எப்போதும் நன்மை செய்து வருகிறது. தமிழக அரசு எப்போதும் அவர்களுக்கு துணை நிற்கும்.

பாதிப்பு இல்லை
இந்தியாவில் வாழும் இந்தியர்கள் இந்த சட்டத்தால் பாதிக்கபட மாட்டார்கள்: யாரும் கவலைப்பட வேண்டாம். குடியுரிமை சட்டம் குறித்து அமித் ஷா தெளிவாக விளக்கிவிட்டார். இந்த சட்டம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பொய் சொல்கிறார்.

ஸ்டாலின் எப்படி
திமுக தலைவர் ஸ்டாலின் தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகிறார்.கொறடா உத்தரவின்படி தான் அதிமுக எம்பிக்கள் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.இந்த சட்டம் இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், என்று முதல்வர் பழனிசாமி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications