2024-ல் செங்கோட்டையில் கொடியேற்றுவது யார்னு மக்கள்தான் சொல்லனும்..பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி
டெல்லி: டெல்லி செங்கோட்டையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ல் யார் கொடியேற்றுவது என்பது குறித்து நாட்டு மக்கள்தான் முடிவெடுப்பார்கள் என பிரதமர் மோடிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் கேசி வேணுகோபால் எம்பி பதிலடி கொடுத்துள்ளார்.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது, அடுத்த ஆண்டும் தாமே ஆகஸ்ட் 15-ந் தேதியன்று டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவேன் என கூறியிருந்தார்.

அதாவது லோக்சபா தேர்தலில் பாஜக வென்று தாம் மீண்டும் பிரதமராவேன்; அப்போது ஆகஸ்ட் 15-ல் தேசிய கொடியை டெல்லி செங்கோட்டையில் மீண்டும் ஏற்றுவேன் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் இப்பேச்சு தொடர்பாக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: ஆமாம்... பிரதமர் மோடி அடுத்த ஆண்டும் ஆகஸ்ட் 15-ல் தேசிய கொடி ஏற்றுவார்.. ஆனால் அவரது வீட்டில்தான் தேசிய கொடி ஏற்றுவார். ஒவ்வொருவரும் தேர்தலில் மீண்டும் நாங்கள் வெல்வோம்; ஆட்சியை பிடிப்போம் என சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உங்களது வெற்றி, தோல்வி என்பது மக்களின் கைகளில், வாக்காளர் கைகளில்தான் உள்ளது. 2023-ல் நின்று கொண்டு 2024-லும் நான் தான் தேசிய கொடி ஏற்றுவேன் என சொல்வது அகம்பாவம்/ ஆணவம். சுதந்திர தின நாளிலும் எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி விமர்சித்து கொண்டிருந்தால் அவரால் எப்படி தேசத்தை கட்டமைக்க முடியுமாம்? இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் கூறுகையில், 2024 தேர்தலில் யார் வெல்வது என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். ஆகையால் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடியும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்றார்.
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா சுலே கூறுகையில், ஒவ்வொரு கட்சியிலும் வாரிசு அரசியல் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா, ஒருவரை நோக்கி நீங்கள் கை நீட்டி பேசும் போது உங்களை 3 விரல்கள் நோக்கி இருக்கும் என்றார். அதனைத்தான் திரும்பவும் சொல்கிறோம். மணிப்பூர் மக்கள் அன்பையும் ஆதரவையும்தான் கேட்கின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications