அதிர்ச்சி.. இந்தியாவிலும் பரவியது தென்னாப்பிரிக்கா, பிரேசில் வகை கொரோனா வைரஸ்
டெல்லி: இந்தியாவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் பரவும் புதுவகை உருமாறிய கொரோனா வைரஸ் பாதித்த நபர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தலைவர் பார்கவா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவியதன் காரணமாக பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியா உட்பட 82 நாடுகளில் இங்கிலாந்தில் பரவிய புதுவகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

அதேநேரம் தென்னாப்பிரிக்காவில் பரவிய வேறுவகையான கொரோனா வைரஸ் அமெரிக்கா உட்பட 41 நாடுகளில் பரவி இருந்தது. பிரேசில் நாட்டில் பரவும் உரு மாறிய கொரோனா மொத்தம் 9 நாடுகளில் பரவியது கண்டறியப்பட்டது. இந்த நிலையில்தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வந்ததில் சிலருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 4 பேருக்கு தென்னாப்பிரிக்க வகை வைரஸ் பாதிப்பும், ஒருவருக்கு பிரேசில் நாட்டு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மற்றும் இவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பார்கவா தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா வகை கொரோனா, நோயாளியின் நுரையீரலில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். தென்னாபிரிக்கா மற்றும் பிரேசில் நாட்டில் பரவிய கொரோனா வைரஸ், தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கான அளவுக்கு தங்கள் புரத நிலையில் மாற்றம் செய்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.
இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை தவிர்த்து பிற பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாட்டு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புடன் சிலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானங்களில் வருவோருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் செய்யப்பட்டு உள்ளது. அதே போன்று தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கும் சான்றிதழ் கட்டாயம் என்று கூறப்பட்டாலும் அந்த நாடுகளில் இருந்து தற்போது இந்தியாவுக்கு நேரடியாக விமான சேவையை இல்லை என்பதால் இவர்கள் வேறு நாடுகள் சென்று அங்கிருந்து இந்தியா வருவதால் கண்காணிப்பதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications