மத்திய அமைச்சர்களுடன் இணைந்து பிரஸ் மீட் நடத்திய பி.ஐ.பி. இயக்குநர் தத்வாலியாவுக்கு கொரோனா
டெல்லி: மத்திய அமைச்சர்களுடன் இணைந்து செய்தியாளர்களை சில நாட்களுக்கு முன்னர் சந்தித்த பத்திரிகை தகவல் அலுவலக (PIB) முதன்மை இயக்குநர் தத்வாலியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது. உலக நாடுகளில் ஒரே நாள் கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.

அதேநேரத்தில் கொரோனா லாக்டவுன் கால கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய பத்திரிகை தகவல் அலுவலக முதன்மை இயக்குநர் தத்வாலியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
Recommended Video
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தத்வாலியா நேற்று இரவு 7 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்த புதன்கிழமையன்று மத்திய அமைச்சர்கள் ஜவடேகர் மற்றும் நரேந்திரசிங் தோமருடன் இணைந்து டெல்லியில் தத்வாலியாவும் செய்தியாளர்களை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications