போலீசை சமாளிக்க புதிய யுக்தி...ராகேஷ் திகைத்தின் புதிய திட்டம்...அடுத்து என்ன
டெல்லி : போலீசாரின் தாக்குதலை சமாளிக்க விவசாயிகளின் உறவினர்களையும் களத்தில் இறக்க பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகைத் புதிய திட்டத்தை வகுத்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து 75 நாளைக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் போலீசாரின் தாக்குதலை சமாளிக்க விவசாயிகளும், விவசாயிகளின் தாக்குதலை சமாளிக்க போலீசாரும் புதுப்புது வழிகளை கண்டுபிடித்து வருகின்றனர்.

விவசாயிகளின் வாள் தாக்குதலை சமாளிக்க, போலீசார் இரும்பு தடிகள், நீண்ட வாள்களை உருவாக்கினர். விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் டெல்லியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகளும் புதிய திட்டத்தை வகுத்து வருகின்றனர்.
ராகேஷ் திகைத், தனது தலைமை பண்பினை வெளிப்படுத்தும் விதமாக போராட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள், போலீஸ் படைகளை சமாளிக்க உறவினர்களை உதவிக்கு அழைக்கும் திட்டத்தை வகுத்துள்ளார்.
அவர் பேட்டியில் கூறுகையில், அரசு எங்களை கவனித்து வருகிறது. அடுத்த கட்ட போராட்டத்தில், போலீஸ் மற்றும் ஆயுதப்படையில் பணியாற்றும் விவசாயிகளின் குடும்பத்தினர்கள் பங்கேற்க வேண்டும். இதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் குடும்பத்தினரின் போட்டோவுடன் அமர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதே கோரிக்கையை மற்றொரு விவசாய சங்க தலைவரான தர்மேந்திர மாலிக்கும் விடுத்துள்ளார். அனைத்து வீரர்களும் இந்த போராட்டத்திற்கு தோள் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ராகேஷ் திகைத் கூறுகையில், அரசு நன்றாக காதுகளை திறந்து கேட்க வேண்டும். 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றாலும், சட்ட உறுதி அளிக்காவிட்டால் போராட்டத்தை தொடர பல்வேறு திட்டங்கள் எங்களிடம் உள்ளது. நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும், அரசியல்சாரா போராட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications