சீரியஸ் நோயாளிகளும் மீள்கிறார்கள்.. அசத்தும் பிளாஸ்மா சிகிச்சை.. ஹேப்பி நியூஸ் சொன்ன கெஜ்ரிவால்
டெல்லி: கொரோனா வைரஸ் சிகிச்சையில் பிளாஸ்மா சிகிச்சை பயனுள்ளதாக இருக்கிறது என்பதை கண்கூடாக பார்த்து வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
குணமடைந்த கொரோனா வைரஸ் நோயாளிகள், பிறர் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவர்களின் ரத்த பிளாஸ்மாவை தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நான்கு நோயாளிகள் உடல்நிலை நல்ல நிலையில் தேறியுள்ளதாக பேட்டியின்போது உடனிருந்த, கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனத்தின் (ஐ.எல்.பி.எஸ்) இயக்குநர் டாக்டர் எஸ்.கே.சரின் தெரிவித்தார். இதில் 2 நோயாளிகள் வென்டிலேட்டர்கள் மூலம் சிகிச்சையளிக்கும் நிலையில் இருந்தனர். இப்போது இருவரும் ஐ.சி.யுவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளனர்.
கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், பிளாஸ்மா சிகிச்சைக்காக, கடந்த வாரம் மத்திய அரசிடமிருந்து எங்களுக்கு அனுமதி கிடைத்தது, கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட 4 நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டது. இதுவரை கிடைத்த முடிவுகள் ஊக்கமளிக்கின்றன. மீதமுள்ள தீவிர நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க இப்போது மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும். அடுத்த வாரம், இதுபோன்ற சிகிச்சை விரிவுபடுத்தப்படும்.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128 கேஸ்கள் பதிவாகியுள்ளன, மாநிலத்தில் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 2,376 ஆக உள்ளது. குணமடைந்த பின்னர், 808 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பால், டெல்லியில் 50 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவில் கோவிட் -19 பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 23,077 ஆக உயர்ந்ததாக சுகாதார மற்றும் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications