"சீக்கிரமா ஸ்கூலை திறங்க.. மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுங்க".. சுப்ரீம் கோர்ட்டுக்கு போன மாணவி
பள்ளிகளை திறக்கவிடக் கோரி மாணவி வழக்கு தொடுத்துள்ளார்
டெல்லி: பள்ளிகளை விரைவாக திறந்து, மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு செல்ல மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று பள்ளி மாணவி ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த 2 வருஷமாகவே கொரோனா நம்மை தாக்கி கொண்டிருக்கிறது.. அதனால், கடந்த 2020-ல் இருந்தே பள்ளிகள் மாணவர்கள் நலன் கருதி மூடப்பட்டுள்ளது..
சில மாநிலங்களில் மட்டும் 10, 12ம் வகுப்பு திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது.. சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகள் நடக்காமலேயே மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து பல மாநிலங்களும் இதையே கடைபிடித்தன.

3வது அலை
அதேசமயம், எனினும் மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ஆன்லைன் கிளாஸ்கள் நடந்து வருகின்றன.. இப்போது கூட தொற்று முழுமையாக குறையவில்லை.. 3வது அலை வரப்போவதாக சொல்லி கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த வருஷமும் வீட்டில் முடங்கி போய் ஆன்-லைன் கிளாஸ் படித்து வரும் மாணவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிக் கூடங்கள்
இப்படிப்பட்ட சூழலில்தான் டெல்லியை சேர்ந்த 12-,ம் வகுப்பு மாணவி வழக்கறிஞர் அமர் பிரேம் பிரகாஷ் என்பவர் மூலம் பொதுநல மனுத்தாக்கல் ஒன்றினை செய்துள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது: கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்..

ஆன்லைன் கிளாஸ்
வறுமை நிலையில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆன்-லைன் வகுப்பிற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளும் இல்லை... இதனால் குழந்தைகளுக்கு கல்வி என்ற அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது. ஏற்கனவே வறுமையில் வாடிய ஏழை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஆன்-லைன் வகுப்பு செல்ல முடியாமல், குழந்தை தொழிலாளர் நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது..

மாணவர்கள்
ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளால் ஆன்-லைன் வகுப்புக்கு பணம் செலுத்தவும் முடியவில்லை, தனியாக டியூஷன் வைத்து கொள்ளவும் இயலவில்லை. அதனால், பள்ளிகளை விரைவாக திறந்து மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு செல்ல மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உத்தரவோ, அல்லது வழிகாட்டலோ வகுக்க வேண்டும்..

பள்ளிகள்
இனியும் காலம் தாழ்த்தாமல், முழுமையான, விரைவான முடிவை பள்ளி திறப்பு குறித்து எடுக்கவேண்டும்... இது நாடுமுழுவதும் உள்ள மாணவர்கள் மனநிலை, உணர்வு குறித்த விவகாரம்..." என்று அந்த மாணவி கேட்டுக் கொண்டுள்ளார். தொற்று பாதிப்பு இன்னும் நாட்டில் குறையாத நிலையில், பள்ளிகள் திறப்பு என்பது எப்போது சாத்தியமாகும் என்று தெரியவில்லை.. எனினும் இந்த மாணவியின் பொதுநலமனு மீது விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications