21 நாட்களுக்கு, யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.. மோடி உத்தரவு
டெல்லி: இன்று நாள் இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு யாரும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது, விருந்தினர்களை வீட்டுக்கு அனுமதிக்காதீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.
இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது, கொரோனா காட்டுத் தீ போல வேகமாக பரவி வருகிறது என்று தெரிவித்த அவர், இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று அறிவித்தார்.

அதாவது ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. மேலும், நரேந்திர மோடி பேசுகையில், அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே, கொரோனா பாதிப்பை 100% கட்டுப்படுத்துவது சாத்தியம்.
மக்கள் இந்த 21 நாட்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடித்து வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும், அல்லது, இந்தியா 21 வருடங்கள் பின்னோக்கி சென்று விடும்.
உங்கள் வீட்டுக்குள் எந்த ஒரு விருந்தினரையும் அனுமதிக்காதீர்கள், நீங்களும் வீட்டைவிட்டு வெளியே செல்லாதீர்கள். இதை நான் உங்களை கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
வல்லரசு நாடுகளில் கூட இந்த பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே பொருளாதாரம் பாதிக்கப் பட்டாலும் பரவாயில்லை என்பதற்காக 21 நாட்களும் முழு லாக் டவுன் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. லட்சுமன் ரேகையை யாரும் தாண்டாதீர்கள்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சிரமங்களை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications