பிரதமர் மோடி என்ன கடவுளா? பாஜக உறுப்பினர்கள் செயலால் டென்ஷன் ஆன கார்கே!
டெல்லி: பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்திற்கு வருவார்.. எதிர்க்கட்சிகளை கிழிக்க போகிறார் என பாஜகவினர் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால், டென்ஷன் ஆன மல்லிகார்ஜுன் கார்கே, "மோடி என்ன பாரதமாதாவா, கடவுளா, வரட்டும் பார்த்துக்கொள்கிறோம்.. என்று பேசினார்.
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை மற்றும் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் உள்ளிட்டவை தேசத்தையே உலுக்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை பற்றி நாடாளுமன்றத்தில் எதுவும் இதுவரை எதுவும் கூறவில்லை.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இதுபற்றி பேச வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த ஜூலை 26 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தனர். 50 எம்பிக்களின் ஆதரவு இருந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சபாநாயகரும் ஒப்புதல் தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை மக்களவையில் அதன் மீதான விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார். இரண்டு நாட்களாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவதம் நடைபெற்றது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் விவாதத்திற்கு பங்கேற்று பேசினர்.
இன்று பிரதமர் மோடி தனது பதிலுரையை பேசுகிறார். 4 மணியளவில் பிரதமர் மோடி பதிலளித்து பேசுகிறார். இதனிடையே, இன்று ராஜ்யசபாவில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, பாஜக எம்.பிக்கள் தொடர்ந்து குறுக்கிட்டனர். பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்திற்கு வருவார்.. எதிர்க்கட்சிகளை கிழிக்க போகிறார் என தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால், டென்ஷன் ஆன மல்லிகார்ஜுன் கார்கே, "மோடி என்ன பாரதமாதாவா, கடவுளா, வரட்டும் பார்த்துக்கொள்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications