"அன்பு, அமைதி, கருணை.." கிறிஸ்துமஸ் நாளில் திடீரென தேவாலயம் சென்ற பிரதமர் மோடி! சிறப்பு பிரார்த்தனை
டெல்லி: இன்று நாடு முழுக்க உற்சாகமாகக் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கிடையே கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்புப் பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றார். டெல்லியில் குடியரசுத் தலைவர் இல்லம் அருகே உள்ள தேவாலயத்தில் நடந்த சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி, சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
உலகெங்கும் இன்று டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. உலகின் கிறிஸ்துவர்களின் மிக முக்கியமான ஒரு பண்டிகையாகக் கிறிஸ்துமஸ் பண்டிகை கருதப்படுகிறது. இதனால் டிசம்பர் கடைசி வாரம் வந்துவிட்டாலே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிடும். இந்தாண்டும் கொண்டாட்டங்கள் கோளகமாக இருக்கிறது.

இந்தியாவிலும் நாடு முழுக்க உள்ள கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸை கொண்டாடி வருகிறார்கள். இதற்காகத் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்களும் நடைபெறுகிறது. இதற்கிடையே கிறிஸ்துமஸ் சிறப்புப் பிரார்த்தனை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். டெல்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷன் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்புப் பிரார்த்தனையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
May Christmas bring renewed hope, warmth and a shared commitment to kindness.
— Narendra Modi (@narendramodi) December 25, 2025
Here are highlights from the Christmas morning service at The Cathedral Church of the Redemption. pic.twitter.com/BzvKYQ8N0H
இது குறித்த போட்டோக்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். பிரதமர் மோடி மேலும், "டெல்லியில் உள்ள ரிடெம்ப்ஷன் கதீட்ரல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் கலந்து கொண்டேன். அன்பு, அமைதி மற்றும் கருணையை கிறிஸ்துமஸ் பிரதிபலித்தது. கிறிஸ்துமஸின் உணர்வு நமது சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications