நமது வீரர்களின் உழைப்பு, மன உறுதி வேற லெவல்... இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
டெல்லி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 -1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 -1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் இந்த அசத்தலான வெற்றிக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியதாவது:- ஆஸ்திரேலியாவின் இந்திய அணியின் வெற்றிகுறித்து அனைவரும் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்திய வீரர்களின் அயராத உழைப்பும், பேரார்வமும் போட்டி முழுவதும் வெளிப்பட்டது. வெற்றிதான் வீரர்களின் ஒரே இலக்காக இருந்ததால் அதற்கான திடமான மன உறுதியும் அவர்களிடம் வெளிப்பட்டது. எதிர்காலத்திலும் அவர்களுடைய முயற்சிகள் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள் என்று மோடி கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications