குடியரசுத் தலைவர்.. குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்து.. தீபாவளி வாழ்த்து பகிர்ந்துக்கொண்ட மோடி!
டெல்லி: நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளி பண்டிகையை கடற்படையினருடன் சேர்ந்து பிரதமர் மோடி கொண்டாடி இருந்தார். இதனையடுத்து இன்று மாலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து பிரதமர் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டார்.
இந்தச் சந்திப்பின் புகைப்படங்களை குடியரசுத் தலைவர் அலுவலகம், சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, "பிரதமர் நரேந்திர மோடி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முன்னதாக, பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துக்களை நாட்டு மக்களுக்கு எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். "தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த ஒளிமயமான திருநாள் நமது வாழ்வில் நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும். நேர்மறையான எண்ணங்கள் நம்மைச் சூழ்ந்திருக்கட்டும்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.
மேலும், இந்த ஆண்டு தீபாவளியை பிரதமர் மோடி, இந்தியாவின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பலில், இந்திய கடற்படை வீரர்களுடன் கொண்டாடினார். கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் மத்தியில் உரையாற்றிய மோடி, போர்க்கப்பலின் முக்கியத்துவத்தை பாராட்டினார்.
அவர், "ஐஎன்எஸ் விக்ராந்தின் பெயரைக் கேட்டாலே பாகிஸ்தானுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. அதன் பெயர் மட்டுமே எதிரியின் துணிச்சலைக் குலைக்கும் என்றால், அதுதான் ஐஎன்எஸ் விக்ராந்த்" என்று குறிப்பிட்டார்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications