பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் மீண்டும் நாளை ஆலோசனை... லாக்டவுன் நீட்டிப்பு பற்றி முக்கிய முடிவு
டெல்லி: பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மீண்டும் நாளை காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் 2-ம் தேதியன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையில் நாளை மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஊரடங்கை நீட்டிப்பது பற்றி விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஊரடங்கை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பல மாநிலங்களில் இருந்தும் முதலமைச்சர்கள் வலியுறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என முதல் குரல் எழுப்பியவர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ். ஆனால் அவருக்கும் ஒரு படி மேலே சென்று ஏப்ரல் 30 வரை ஒடிசாவில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக். இதை வைத்து பார்க்கும் போது பெரும்பாலானா மாநில அரசுகளின் கோரிக்கையாக இருப்பது மத்திய அரசு ஊரடங்கை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது தான்.
இதனிடையே கடந்த 8-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு உயிரும் தமது அரசுக்கு முக்கியம் என்றும், ஒவ்வொரு உயிரையும் கொரோனாவில் இருந்து பாதுகாக்க வேண்டியது அரசின் முழுமுதற் பணியாக உள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஒரேநேரத்தில் ஊரடங்கை முடித்துக்கொள்வது என்பது சாத்தியமில்லை என சூசகமாக தெரிவித்திருந்தார். இதனால் நாளை நடைபெறும் முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு லாக்டவுன் நீட்டிப்பு பற்றி முக்கிய அறிவிப்பு பிரதமரிடம் இருந்து வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications