ரூ.2000 நோட்டு.. பிரதமருக்கு சம்மதம் இல்லை.. ஒருமித்த கருத்துக்கு ஓகே சொன்னார்..நிருபேந்திர மிஸ்ரா!
டெல்லி: 2016ஆம் ஆண்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த பின்னர் ரூ. 2000 நோட்டுக்களை வெளியிடுவதில் பிரதமர் மோடிக்கு சம்மதம் இல்லை. அதிக மதிப்பு கொண்ட பணத்தை புழக்கத்தில் விட்டால் பணம் புழக்கம் ஏற்படும் என்ற ஒருமித்த கருத்தை ஏற்றுக் கொண்டார் என்று பிரதமர் மோடிக்கு முதன்மை செயலாளராக இருந்த நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இன்று பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு டைம்ஸ் ஆப் இந்தியாவில் நிருபேந்திர மிஸ்ரா சிறப்புக் கட்டுரை எழுதியுள்ளார். அதில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

நிறுவன கட்டமைப்பு
மேலும் அவர் அதில், ''பிரதமர் மோடி ஆலோசனையை அல்லது கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் நிறுவன கட்டமைப்பிற்காக ஒருமித்த கருத்து இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்றுக் கொண்டு இருந்தார்.

ஆலோசனை
ரூபாய் நோட்டு தடை செய்த பின்னர் பணம் கிடைப்பதில் ஏற்படும் சிக்கலை பெரிய மதிப்பிலான ரூபாய் நோட்டு தீர்க்கும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டார். இந்த தவறை சரி செய்யும் வகையில் தற்போது ரூ. 2000 நோட்டு அச்சிடுவது குறித்து சரியான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்து வருகிறார். அதற்காக ஆலோசனை வழங்கியவர்களை அவர் குற்றம்சாட்டவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

கறுப்புப் பணம்
பிரதமர் மோடி 2016ஆம் ஆண்டில் ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்களை ஒரே நாள் இரவில் தடை செய்து இருந்தார். கறுப்புப் பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. ஆனால், இதையடுத்து புதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காமலும், பழைய ரூயாய் நோட்டுக்கள் கிடைக்காமலும் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை பதுக்குகின்றனர், வரி ஏய்ப்பு செய்ய பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

ஏடிஎம்
புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்களில் 86 சதவீத பணத்தை மட்டுமே வங்கிகள் மூலம் ரிசர்வ் வங்கியாலும் மத்திய அரசாலும் திரும்ப பெற முடிந்தது. இதுவும் மக்களிடம் பணப் புழக்கத்தை குறைத்தது. இதனால், மக்கள் தினமும் தங்களது அன்றாட தேவைகளுக்கு கூட வங்கிகள் மற்றும் ஏடிஎம் முன்பு நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

போலி 2000
பதுக்கலையும், கறுப்புப் பணத்தையும் தடுப்பதற்காகவே ரூ. 1000 நோட்டு ரத்து செய்யப்பட்டது. புதிய 500 ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், புதிய 2000 ரூபாயை நிலைமையை சமாளிக்க வெளியிடப்பட்டது. இது கேள்வியை எழுப்பி இருந்தது. ஆயிரம் ரூபாயை தடை செய்து விட்டு ஏன் இரண்டாயிரம் ரூபாயை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. இதுவும், அறிமுகம் செய்யப்பட்டவுடன் மக்களின் கைகளுக்கு கிடைக்கவில்லை. இதுவும் பதுக்கப்பட்டது. புதிய ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வருவதற்கு முன்பு போலி இரண்டாயிரம் ரூபாய் நோட்டும் சந்தைக்கு வந்தது. இது மக்களிடையே பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.

ரிசர்வ் வங்கி
இதையடுத்து 2018-19 நிதியாண்டின் இறுதியில் ரூ. 2000 நோட்டுக்களை அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்திக் கொண்டது. இதைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டிலும் இந்த ரூபாய் நோட்டுக்கள் அச்சிடவில்லை என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications