ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி இன்று திடீரென சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடி லடாக் எல்லைப் பகுதிகளில் நிலவரங்களை ஆய்வு செய்தார். எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் தொடருகின்றன.

இந்த நிலையில் எல்லைப் பகுதிகளுக்கு பிரதமர் மோடி திடீரென பயணம் மேற்கொண்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அங்கு ராணுவ வீரர்களிடையே எழுச்சிமிக்க உரையாற்றினார் மோடி.
இதனைத் தொடர்ந்து இன்றுடெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இச்சந்திப்பு தொடர்பான படங்களை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மாளிகை, தேசிய, சர்வதேச விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications