முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
Recommended Video

டெல்லி: காஷ்மீரில் 4 இடங்களில் பாகிஸ்தான் விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்திய நிலையில், எல்லையில் நிலவும் பதற்றம் தொடர்பாக பிரதமர் மோடி அதிகாரிகள், அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மாலையில் முப்படைத் தளபதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் மரணமடைந்ததை அடுத்து, பதிலடி தரும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியது.
அதன்படி நேற்று விடிகாலை விமானபடை தாக்குதல்களை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை நொறுக்கி எடுத்தது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற தகவலும் வெளியானது.

பாதுகாப்பு நடவடிக்கை
இதனால் திரும்பவும் இந்தியாவை பழிதீர்க்க பாகிஸ்தான் அடுத்த நடவடிக்கையில் எப்போது வேண்டுமானாலும் இறங்கும், இந்த விஷயத்தை சும்மாவிடாது என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரமாக கையில் எடுத்தது.

எல்லையில் பதற்றம்
அதன்படியே பாகிஸ்தானின் 2 விமானங்கள், காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் அத்துமீறி நுழைந்து, குண்டு வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவ தொடங்கி உள்ளது.

விமானங்கள்
இதையடுத்து, விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், உடனடியாக ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் விமானங்கள் பறக்க காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல அமிர்தரசிலும் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அஜித் தோவல்
இதனால் நாட்டின் பாதுகாப்பு விஷயங்கள் குறித்த அவசர ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கூடியது. உயர் அதிகாரிகள், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இந்த ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக தேசிய இளைஞர் தின விழாவில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி நிகழ்ச்சிகளை அனைத்தையும் அவசர அவசரமாக முடித்துக் கொண்டு உடனடியாக ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்து சேர்ந்தார்.

விளக்கனார்
இந்த அவசர ஆலோசனையில் ரா அமைப்பும் பங்கேற்றது. கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமரிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கினார். பிறகு எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் ராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் முப்படைத் தளபதிகளுடனும் இன்று மாலை முக்கிய ஆலோசனையை நடத்தினார் பிரதமர்.
-
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications