இந்திய அணியின் 'கம்பேக்' வெற்றி நமக்கான வாழ்க்கைப் பாடம் - பிரதமர் மோடி
டெல்லி: தோல்வியில் இருந்து மீண்டு வந்த இந்திய அணியின் வெற்றி, நம் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கான பாடம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய அணி வென்றது என்பது வரலாற்றுச் சாதனையாக அமைந்தது. இந்தியா 4-0 என தோற்கும் என்று சூளுரைத்தவர்களுக்கு சரியான பதிலடியும் கொடுக்கப்பட்டது.

அணியின் முன்னணி வீரர்கள் பெரும்பாலானோர் காயத்தால் அடுத்தடுத்து போட்டியில் இருந்து வெளியேற, இரண்டாம் தர வீரர்களை வைத்து கோப்பையை வென்று வந்திருக்கிறது இந்திய அணி.
இந்நிலையில், அசாமில் உள்ள டெஸ்பூர் பல்கலையில் இறுதியாண்டு படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள் மத்தியில் வீடியோ கான்ஃபரசிங் வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த தருணத்தில் நாட்டின் செயல்பாட்டையும், இந்திய கிரிக்கெட் அணியின் 2-1 என்ற ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றியையும் அவர் ஒப்பிட்டு பேசினார்.
"தொற்றுநோயின் தொடக்கக் காலத்தில், என்ன நடக்கப் போகிறதோ என்று மக்கள் அச்சத்தில் இருந்தனர், ஆனால் நாம் தீர்வுகளைக் கண்டறிந்து கொரோனாவை எதிர்த்துப் போராடினோம். முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட நமது தடுப்பூசிகள் நம் விஞ்ஞானிகள் மீதான நம்பிக்கையின் விளைவாகும்" என்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் குறித்து பெருமையுடன் பிரதமர் மோடி பேசினார்.
"நாம் 75வது சுதந்திரத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறோம். இப்போது நீங்கள் ஒரு புதிய இந்தியாவுக்காக (தன்னம்பிக்கை கொண்ட இந்தியா) வாழ வேண்டும். இந்த ஆண்டு முதல் 100வது சுதந்திர ஆண்டு வரை, இந்த நாட்டின் இளைஞர்களுக்கு பொற்காலமாக இருக்கும்.
நேர்மறையான விளைவுகளுக்கு நேர்மறையான மனநிலை முக்கியமானது. இதுவே தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவின் சாராம்சம் என்றும்" மோடி கூறினார்.
"பல சவால்களை எதிர்கொண்ட நமது கிரிக்கெட் அணி (மனநிலையின் மாற்றத்திற்கு) மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. நாம் முதல் போட்டியில் மோசமாக தோற்றோம். ஆனால், நாம் மீண்டும் போராடி சவாலான சூழ்நிலையில் வென்றோம். நமது கிரிக்கெட் அணிக்கு குறைந்த அனுபவமே இருந்த போதிலும், அதிக அளவில் இருந்த நம்பிக்கை புதிய வரலாற்றை உருவாக்கியது.
நமது கிரிக்கெட் அணியின் வெற்றி ஒரு பெரிய வாழ்க்கைப் பாடம். நமது மனநிலையை நேர்மறையாக மாற்ற வேண்டும்" என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications