என்ன மேக மூட்டம் ரேடாரை மறைக்குமா? வைரலான மோடியின் பேச்சு.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
பாலக்கோடு தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து பிரதமர் மோடி பேசியது இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது.
டெல்லி: பாலக்கோடு தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து பிரதமர் மோடி பேசியது இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது.
பாலக்கோடு தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து பிரதமர் மோடி நியூஸ் நேஷன் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். இதில் பிரதமர் மோடி ரேடார் தொழில்நுட்பம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மோடி தனது பேச்சில், பாகிஸ்தான் பாலக்கோடு தாக்குதல் திட்டமிடப்பட்ட அன்று நான் தாக்குதலுக்கான ஏற்பாடுகளை ஆராய்ந்து கொண்டு இருந்தேன். ஆனால் வானிலை திடீர் என்று மோசமாக மாறிவிட்டது. நாங்கள் அதை எதிர்பார்க்கவில்லை.

வானிலை மோசம்
அங்கு நிறைய கரு மேகம் இருந்தது. அதிகாரிகள் என்னிடம் ஆபரேஷனை தள்ளி வைக்கலாமா என்று கேட்டார்கள். தற்போது நிறைய மேகம் இருக்கிறது. இது விமானத்தை மறைக்கும், அதனால் இந்திய விமானப்படை ரேடாரில் இருந்து தப்பிக்க முடியும். இது இந்திய விமானப்படைக்கு உதவும். அதனால் ஓகே, சென்று தாக்குங்கள், மேகம் நம்மை காப்பற்றும், என்று குறிப்பிட்டேன் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

பலர் கிண்டல்
இந்த நிலையில் மோடியின் இந்த பேச்சு இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது. பலர் மோடியை கிண்டல் செய்து வருகிறார்கள். பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி பேசுவது தவறு என்று கிண்டல் செய்து வருகிறார்கள். நேற்று இரவில் இருந்து இந்த ரேடார் விஷயம்தான் இணையத்தில் ஹாட் டாப்பிக்.
|
பாலக்கோடு தாக்குதல்
பாலக்கோடு தாக்குதலுக்கு முன் பிரதமர் மோடி மேகங்களை ஆராய்ச்சி செய்யும் அரிய புகைப்படம் என்று இவர் கிண்டல் செய்து இருக்கிறார்.
|
நிலாவில் திட்டம்
இஸ்ரோ: நாங்கள் நிலவிற்கு செயற்கைகோள் அனுப்ப போகிறோம்.
மோடி: அப்படி என்றால் பௌர்ணமி அன்று அனுப்புங்கள். அப்போதுதான் தரையிறங்க வசதியாக இருக்கும், என்று மோடியை கிண்டல் செய்துள்ளார்.
|
டெலிட் செய்துவிட்டனர்
பிரதமர் மோடியின் ரேடார் கருத்தோடு பாஜகவிற்கும் ஏற்பில்லை போல. அவர்கள் செய்த டிவிட்டையே டெலிட் செய்துவிட்டார்கள், என்று இவர் கிண்டல் செய்துள்ளார்.
|
இதுதான் காரணம்
நீரவ் மோடி, மல்லையா, மெஹுல் சோக்சி இந்தியாவை விட்டு வெளியேறிய போதும் இதேபோல மேகம் இருந்ததால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை போல, என்று இவர் கிண்டல் செய்துள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications