"இரு முறை சந்தித்தேன்.. அவரது அன்பை மறக்க முடியாது..!" ராணி எலிசபெத் மறைவு.. பிரதமர் மோடி இரங்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரிட்டன் ராணி எலிசபெத் காலமான நிலையில், அவருக்கு உலகெங்கும் உள்ள தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிரிட்டனில் மிக நீண்ட காலம் ராணியாக இருந்த இரண்டாம் மகாராணி எலிசபெத் இன்று உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.

கடந்த ஆண்டு முதலே உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த மகாராணி எலிசபெத், சில காலமாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்த ஓய்வெடுத்தே வந்தார்.

 PM Modis Tribute To Queen Elizabeth: Will Never Forget Her Warmth, Kindness

இந்தச் சூழலில் இரண்டாம் மகாராணி எலிசபெத் உயிரிழந்துள்ளார். இதற்கு பல்வேறு உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி இரண்டாம் மகாராணி எலிசபெத்திற்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "2015 மற்றும் 2018இல் இங்கிலாந்து பயணத்தில் ராணி இரண்டாம் எலிசபெத்தைச் சந்தித்தேன். அது மறக்க முடியாத ஒன்று, அவரது அரவணைப்பையும் அன்பையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்குப் பரிசாகக் கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார். இதையெல்லாம் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.

 PM Modis Tribute To Queen Elizabeth: Will Never Forget Her Warmth, Kindness
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+