முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்! பிரதமர் மோடி போற்றிப் புகழாரம்!
டெல்லி: முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும் எனக் கூறி அவரை போற்றிப் புகழ்ந்துள்ளார் பிரதமர் மோடி.
நம் தேசத்திற்காக முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;

தேவரை வணங்குகிறேன்
''பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.'' இவ்வாறு பிரதமர் மோடி தனது பதிவில் கூறியிருக்கிறார்.

நேரில் வரும் திட்டம்
இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்துக்கு பிரதமர் மோடி நேரில் வந்து முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி மரியாதை செலுத்துவார் எனக் கூறப்பட்ட நிலையில் இறுதியில் அந்த பயணத் திட்டம் ரத்தானது. தாம் நேரில் வரவில்லை என்றாலும் கூட முத்துராமலிங்கத் தேவரை நினைவுகூர்ந்து அவரது குருபூஜை நாளில் புகழாரம் சூட்டி பதிவு வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி.

முக்கியாமனது
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் முக்கியாமனது, முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்பது தான். அப்படியென்றால் தேசியத்தையும் தெய்வீகத்தையும் தான் அவர் இப்படி குறிப்பிடுகிறார் என்பது போல் இங்கு பொருள் படுகிறது. அதேபோல் முத்துராமலிங்கத் தேவரை பெரு மதிப்பிற்குரியவர் என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி இவ்வாறு புகழாரம் சூட்டியுள்ள நிலையில், ஆளுநர் ரவி ராஜ்பவனில் வைத்து தேவர் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தி கவனம் ஈர்த்துள்ளார்.

கடந்தாண்டு பதிவு
கடந்தாண்டு முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளன்று அவர் குறித்து பதிவு வெளியிட்டிருந்த பிரதமர் மோடி, மக்கள் நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர் என்றும் மேலும் துணிச்சலும், கனிவும் கொண்ட உள்ளத்துக்குச் சொந்தக்காரர் எனவும் புகழாரம் சூட்டியிருந்தார்.
-
மாஸ் லீடர்.. அண்ணாமலை பிம்பம் உடைந்ததா? எந்த தொகுதியா இருந்தால் என்ன? வென்று காட்ட முடியாதா? -
அவிநாசியில் முருகன்.. மத்திய அமைச்சராகும் மலை? ரூட் போடும் அண்ணாமலை! எகிறும் எதிர்பார்ப்பு! -
“எடப்பாடி உடன் சேர்த்து வைத்தது பாஜக தான்.. எல்லாம் அமித் ஷா முயற்சியால் நடந்தது” - டிடிவி தினகரன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன?












Click it and Unblock the Notifications