முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்! பிரதமர் மோடி போற்றிப் புகழாரம்!
டெல்லி: முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும் எனக் கூறி அவரை போற்றிப் புகழ்ந்துள்ளார் பிரதமர் மோடி.
நம் தேசத்திற்காக முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;

தேவரை வணங்குகிறேன்
''பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.'' இவ்வாறு பிரதமர் மோடி தனது பதிவில் கூறியிருக்கிறார்.

நேரில் வரும் திட்டம்
இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்துக்கு பிரதமர் மோடி நேரில் வந்து முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி மரியாதை செலுத்துவார் எனக் கூறப்பட்ட நிலையில் இறுதியில் அந்த பயணத் திட்டம் ரத்தானது. தாம் நேரில் வரவில்லை என்றாலும் கூட முத்துராமலிங்கத் தேவரை நினைவுகூர்ந்து அவரது குருபூஜை நாளில் புகழாரம் சூட்டி பதிவு வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி.

முக்கியாமனது
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் முக்கியாமனது, முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்பது தான். அப்படியென்றால் தேசியத்தையும் தெய்வீகத்தையும் தான் அவர் இப்படி குறிப்பிடுகிறார் என்பது போல் இங்கு பொருள் படுகிறது. அதேபோல் முத்துராமலிங்கத் தேவரை பெரு மதிப்பிற்குரியவர் என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி இவ்வாறு புகழாரம் சூட்டியுள்ள நிலையில், ஆளுநர் ரவி ராஜ்பவனில் வைத்து தேவர் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தி கவனம் ஈர்த்துள்ளார்.

கடந்தாண்டு பதிவு
கடந்தாண்டு முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளன்று அவர் குறித்து பதிவு வெளியிட்டிருந்த பிரதமர் மோடி, மக்கள் நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர் என்றும் மேலும் துணிச்சலும், கனிவும் கொண்ட உள்ளத்துக்குச் சொந்தக்காரர் எனவும் புகழாரம் சூட்டியிருந்தார்.
-
சீனியர்களை கழற்றிவிடும் பாஜக? தமிழகத்தில் புதுமுகங்களை களமிறக்க திட்டம்.. பின்னணியில் 3 காரணம் -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
நெல் சாகுபடி வரலாறு காணாத உயர்வு.. கொள்முதலை ‘டபுள்’ மடங்கு ஆக்கக் கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத்












Click it and Unblock the Notifications