PM MODI: இந்தியா வளர்ச்சியை பாராட்ட மனமன்றி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.. ராஜ்யசபாவில் பிரதமர் மோடி அட்டாக்
டெல்லி: நாட்டின் வளர்ச்சியை பாராட்ட மனமில்லாமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வதாக ராஜ்யசபாவில் உரையாற்றிய பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் கடனில் மூழ்கியிருந்ததாகவும் தற்போது வராக்கடன் குறைந்து இருப்பதாகவும் மோடி பேசியுள்ளார்.
ராஜ்யசபாவில் பிரதமர் மோடி இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலுரை ஆற்றினார். லோக்சபாவில் மோடியின் பதிலுரை இன்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பதிலளிக்க பயந்து மோடி அவைக்கு வரவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த பரபரப்புக்கு நடுவே பிரதமர் மோடி ராஜ்யசபாவில் உரையாற்றினார். பிரதமர் மோடி உரையாற்ற தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகள் அமளிக்கு நடுவே மோடி பேசத் தொடங்கினார். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், பிரதமர் மோடி தனது உரையை தொடர்ந்தார். மோடி பேசியதாவது:-
நமது இளைஞர்களின் உரிமைகளை ஊடுருவல்காரர்கள் பறிக்கிறார்கள். பழங்குடியினரின் நிலங்களை ஊடுருவல்காரர்கள் பறிக்கிறார்கள். ஊடுருவல்காரர்களை எதிர்க்கட்சிகள் பாதுகாக்கின்றன. இந்தியா செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களால் இளைஞர்கள் பயன் அடைவார்கள்.
இந்தியா வளர்ச்சியை பாராட்ட மனமன்றி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் அனுபவம் இருந்தும் எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகளின் தவறுகளை சரி செய்வதிலேயே நேரம் ஓடிவிடுகிறது.
எனது ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது. காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் கடனில் மூழ்கியிருந்தன. தற்போது வங்கிகள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன" இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications