15 மாதங்களுக்கு பின்.. முதல் வெளிநாட்டு பயணம்.. வங்கதேசம் புறப்பட்டார் பிரதமர் மோடி!
டெல்லி: 2 நாள் பயணமாக பிரதமர் மோடி வங்கதேசத்திற்கு இன்று சென்றுள்ளார்.
கொரோனா பரவலுக்கு பின் பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் எதையும் ஏற்கொள்ளவில்லை. பாதுகாப்பு கருதியும், லாக்டவுன் காரணமாகவும் பிரதமர் மோடி வெளிநாடுகள் எதற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் கொரோனா பரவலுக்கு பின் பிரதமர் மோடி முதல் வெளிநாட்டு பயணத்தை இன்று மேற்கொள்கிறார்.

சரியாக 15 மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். வங்கதேசம் சென்ற அவர் 2 நாட்கள் அங்கு வசிப்பார். இன்று வங்கதேசத்தின் சுதந்திர தினம் ஆகும்.
அந்நாட்டு சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளும்படி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்த நிலையில் பிரதமர் மோடி சென்றுள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது அதிலும் இந்தியாவிற்கு நெருக்கமாக இருக்கும் நாட்டுடன் பயணம் மேற்கொள்வது சந்தோசம் தருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா வழங்கும் அமைதிக்கான காந்தி விருது வங்கதேசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த பிரதமர் ஷேக் முஜிப் ஊர் ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டது. இவர் வங்கதேசத்தின் பிரதமர் மற்றும் அதிபராக இருந்தவர்.
இவருக்கு விருது வழங்கியதற்கு ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்த நிலையில் தற்போது பிரதமர் மோடி வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications