Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆக்சிஜன் தேவை.. கொரோனா பரவலை முழுபலத்தோடு இந்தியா எதிர்கொள்கிறது.. மன் கி பாத்தில் பிரதமர் மோடி உரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனாவை தனது முழு பலத்தோடு இந்தியா எதிர்கொண்டு வருகிறது, மக்களுக்கு தேவையான ஆக்சிஜனை இந்தியாவின் எல்லா மூலைக்கும் கொண்டும் செல்லும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்று பிரதமர் மோடி மன் கி பாத் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி எல்லா மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்கள் முன் வானொலியில் பேசுவது வழக்கம். மக்களிடம் பேச விரும்பும் விஷயங்களை, முக்கிய தகவல்களை இதில் பிரதமர் மோடி பேசுவார்.

இதில் நிறைய தகவல்களை அவர் பகிர்ந்து கொள்வார். கொரோனா தொடங்கிய பின் பிரதமர் மோடியின் மன் கி பாத் உரை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

பேசினார்

பேசினார்

மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி முன்கள பணியாளர்கள் சிலருடன் உரையாடினார். ஆக்சிஜன் கண்டெயினர் லாரி ஓட்டுநர், ஆக்சிஜன் எக்பிரஸ் ஓட்டுநர், ஏர்போர்ஸ் கேப்டன் ஆகியோரிடம் உரையாற்றினார். மருத்துவமனைகளுக்கு இவர்கள் ஆக்சிஜன் கொண்டு சென்ற பணிகள் குறித்தும், அவர்களின் அனுபவம் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்

உரை

உரை

அதன்பின் பிரதமர் மோடி தனது உரையில், கடந்த 100 நாடுகளில் மிகப்பெரிய பெருந்தொற்று கொரோனா வைரஸ். கொரோனாவை தனது முழு பலத்தோடு இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இரண்டாம் அலையின் தொடக்கத்தில் ஆக்சிஜன் தேவை இந்தியாவில் அதிகமாக இருந்தது. ஆக்சிஜன் தேவை இந்தியாவிற்கு பெரிய சவாலாக இருந்தது.

சவால்

சவால்

இந்தியாவின் எல்லா பகுதிக்கும் ஆக்சிஜன் அனுப்புவது பெரிய சவாலாக இருந்தது. வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன், ஆக்சிஜன் டேங்கர்ஸ், ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் விமானப்படையினரும், டிஆர்டிஓ பணியாளர்களும், ரயில்வே பணியாளர்களும் சிறப்பாக பணியாற்றினார்கள்.

ஆக்சிஜன்

ஆக்சிஜன்

இதற்காகவே ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் களமிறக்கப்பட்டன. இதில் ஒரு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்பட்டது. எல்லா பெண்களும் இதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும். எல்லா இந்தியர்களும் இதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும்.

சோதனை மையங்கள்

சோதனை மையங்கள்

இந்தியாவில் தற்போது பல்லாயிரம் கொரோனா சோதனை மையங்கள் உள்ளன. கொரோனா தொடங்கிய போது ஒரே ஒரு கொரோனா டெஸ்ட் மையம் மட்டுமே இருந்தது. இப்போது தினமும் 20 லட்சம் கொரோனா சோதனைகள் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகள் கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள், என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+