ஆக்சிஜன் தேவை.. கொரோனா பரவலை முழுபலத்தோடு இந்தியா எதிர்கொள்கிறது.. மன் கி பாத்தில் பிரதமர் மோடி உரை
டெல்லி: கொரோனாவை தனது முழு பலத்தோடு இந்தியா எதிர்கொண்டு வருகிறது, மக்களுக்கு தேவையான ஆக்சிஜனை இந்தியாவின் எல்லா மூலைக்கும் கொண்டும் செல்லும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்று பிரதமர் மோடி மன் கி பாத் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி எல்லா மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்கள் முன் வானொலியில் பேசுவது வழக்கம். மக்களிடம் பேச விரும்பும் விஷயங்களை, முக்கிய தகவல்களை இதில் பிரதமர் மோடி பேசுவார்.
இதில் நிறைய தகவல்களை அவர் பகிர்ந்து கொள்வார். கொரோனா தொடங்கிய பின் பிரதமர் மோடியின் மன் கி பாத் உரை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

பேசினார்
மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி முன்கள பணியாளர்கள் சிலருடன் உரையாடினார். ஆக்சிஜன் கண்டெயினர் லாரி ஓட்டுநர், ஆக்சிஜன் எக்பிரஸ் ஓட்டுநர், ஏர்போர்ஸ் கேப்டன் ஆகியோரிடம் உரையாற்றினார். மருத்துவமனைகளுக்கு இவர்கள் ஆக்சிஜன் கொண்டு சென்ற பணிகள் குறித்தும், அவர்களின் அனுபவம் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்

உரை
அதன்பின் பிரதமர் மோடி தனது உரையில், கடந்த 100 நாடுகளில் மிகப்பெரிய பெருந்தொற்று கொரோனா வைரஸ். கொரோனாவை தனது முழு பலத்தோடு இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இரண்டாம் அலையின் தொடக்கத்தில் ஆக்சிஜன் தேவை இந்தியாவில் அதிகமாக இருந்தது. ஆக்சிஜன் தேவை இந்தியாவிற்கு பெரிய சவாலாக இருந்தது.

சவால்
இந்தியாவின் எல்லா பகுதிக்கும் ஆக்சிஜன் அனுப்புவது பெரிய சவாலாக இருந்தது. வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன், ஆக்சிஜன் டேங்கர்ஸ், ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் விமானப்படையினரும், டிஆர்டிஓ பணியாளர்களும், ரயில்வே பணியாளர்களும் சிறப்பாக பணியாற்றினார்கள்.

ஆக்சிஜன்
இதற்காகவே ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் களமிறக்கப்பட்டன. இதில் ஒரு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்பட்டது. எல்லா பெண்களும் இதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும். எல்லா இந்தியர்களும் இதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும்.

சோதனை மையங்கள்
இந்தியாவில் தற்போது பல்லாயிரம் கொரோனா சோதனை மையங்கள் உள்ளன. கொரோனா தொடங்கிய போது ஒரே ஒரு கொரோனா டெஸ்ட் மையம் மட்டுமே இருந்தது. இப்போது தினமும் 20 லட்சம் கொரோனா சோதனைகள் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகள் கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள், என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications