தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் கொரோனாவுக்கு எதிரான போர் களத்தில் முன்னணி வீரர்கள்- மோடி
Subscribe to Oneindia Tamil
லாக்டவுன்: தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் கொரோனாவுக்கு எதிரான போர் களத்தில் முன்னணி போர் வீரர்களாக திகழ்கின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது. இந்த லாக்டவுன் மே 3-ந் தேதி முடிவடைகிறது.

ஆனால் கொரோனாவின் உக்கிரம் குறையாத நிலையில் தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் லாக்டவுனை நீட்டிக்க முடிவு செய்துள்ளன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கின்றன.
இந்த நிலையில் இன்று நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி, மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். அப்போது, கொரோனாவுக்கு எதிரான போரை இந்தியாவில் மக்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர்.
கொரோனாவுக்கு எதிரான போர்க்களத்தில் தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் போர் வீரனாக திகழ்கின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications