கொரோனா: நாடு முழுவதும் மே 3-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு- பிரதமர் மோடி
டெல்லி: கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Recommended Video
உலக நாடுகளை பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது கொரோனா வைரஸ். பல்லாயிரம் மனித உயிர்களை பலி எடுத்த கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் உக்கிரமாக இருக்கிறது.

இந்தியாவில் 324 பேரை பலி கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,048. கொரோனாவைத் தடுக்க ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த லாக்டவுன் இன்றுடன் நிறைவடைகிறது.
ஆனால் கொரோனாவின் தாக்கம் நீடிப்பதால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் லாக்டவுனை ஏப்ரல் 30-ந் தேதி வரை நீட்டித்துள்ளன. இந்நிலையில் லாக்டவுனை தேசிய அளவில் நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
அவர் தமது உரையில், கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒருங்கிணைந்து ராணுவ வீரர்களைப் போல போராடி வருகின்றனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நமது நாடு முன்னணியில் உள்ளது.
பண்டிகை காலமாக இருந்த போதும் லாக்டவுனால் நாட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இந்த தேசத்தின் மக்களின் தியாகங்களுக்கு தலைவணங்குகிறேன். கொரோனாவை கட்டுப்படுத்த மே 3-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications