மாநிலங்களவையில் கடும் அமளி.. அலட்டிக் கொள்ளாத பிரதமர் மோடி! எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு
டெல்லி: சீனா, எப்ஸ்டீன் ஃபைல்ஸ், அமெரிக்கா வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் மக்களவை முடங்கியுள்ளது. இந்நிலையில் மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி எம்பிக்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

குறிப்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சீனா விவகாரம் குறித்து முன்னாள் ராணுவ ஜெனரல் முகுந்த் நரவனே எழுதிய புத்தகத்தில் இருந்து சில விஷயங்களை மேற்கொளிட்டு கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால், அவர் பேச அனுமதிக்கப்படவில்லை. எனவே பிரதமர் பேச முயன்றபோது அவருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.
எனவே குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பிரதமர் உரையின்றி நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து தற்போது மாநிலங்களவையில் மோடி பேசி வருகிறார். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். என்னை பேச விடுங்கள் என்று மோடி கோரிக்கை வைத்தார். ஆனால், ராகுல் காந்தியை பேச விடுங்கள் என காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கமிட்டனர். இதனையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications