யார் மகனாக இருந்தால் எனக்கென்ன.. தூக்கி வெளியே போட வேண்டும்.. ஆவேசமான மோடி
Recommended Video
டெல்லி: பாஜக தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவரான கைலாஷ் விஜயவர்கியாவின் மகனும், எம்எல்ஏவுமான, ஆகாஷ் விஜயவர்கியா மீது பிரதமர் நரேந்திர மோடி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிக்கெட் பேட்டால், அதிகாரியை தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் விஜயவர்கியா.
"இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது யாருடைய மகனாக இருந்தாலும், விதிவிலக்கு இல்லாமல் கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும்" என்று பிரதமர் மோடி பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தெரிவித்ததாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

வரவேற்பா கொடுக்குறீங்க
தாக்குதல் சம்பவத்திற்காக ஆகாஷ் கைது செய்யப்பட்டார். பின்னர், சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டபோது ஆகாஷ் விஜயவர்கியாவை நேரில் சென்று உற்சாகமாக வரவேற்ற நபர்களையும், கட்சியைவிட்டு, நீக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அப்போது தெரிவித்துள்ளார்.
|
வைரல் காட்சி
கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆகாஷ் விஜயவர்ஜியா கடந்த வாரம் புதன்கிழமை, நகராட்சி அலுவலரை கிரிக்கெட் பேட்டால், விரட்டி விரட்டி அடித்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

வாக்குவாதம்
ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருப்போர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நகராட்சி ஊழியர்கள் சென்றுள்ளனர். ஆனால் அங்கு பொது மக்கள் வசிப்பதாகவும், எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற கூடாது என எம்எல்ஏ ஆகாஷ் வாதிட்டார். வாக்குவாதம் முற்றவே, அதிகாரி ஒருவரை ஆகாஷ் பேட்டால் தாக்கினார். அப்போது எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியபடி, நகராட்சி அதிகாரிகளை விரட்டி அடித்துள்ளனர்.

கும்பல் வன்முறை
இதுபோன்ற சம்பவங்கள் பாஜகவை அடாவடி கட்சியாக மக்களிடம் காட்டும் என்று மோடி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். ஏற்கனவே முஸ்லீம்களுக்கு எதிராக, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில், ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி, தாக்குதல்களும், கொலைகளும் நடப்பதாக பாஜகவினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், வன்முறைக்கு எதிராக முதல்முறையாக கட்சியினரை கடுமையாக கடிந்து கொண்டுள்ளார் பிரதமர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications