75வது சுதந்திர தினம்: ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்க.. பிரதமர் மோடி அழைப்பு
டெல்லி: இந்தியாவில் 75வது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை விரட்டி நாம் 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திரம் பெற்றோம். ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் ஏராளமானவர்கள் உயிர் தியாகம் செய்தனர்.
இவர்களின் உயிர் தியாகத்தை போற்றும் வகையிலும், இந்தியா சுதந்திர நாடு என பெருமை கொள்ளும் வகையிலும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடி வருகிறோம்.

75 வது சுதந்திர தினம் கொண்டாட்டம்
அதன்படி 2022 ஆகஸ்ட் 15ல் நாம் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். 75வது சுதந்திர தினத்தை கடந்த ஓராண்டுகளாக கொண்டாடி வருகிறோம். இதற்காக 'அசாதி கா அம்ரித் மோட்சாவ்' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த சுதந்திர தினத்தை வரும் ஆகஸ்ட் 15ல் வெகுவிமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அழைப்பு
இதற்கான ஏற்பாட்டை மத்திய அரசு சிறப்பாக செய்து வருகிறது. அந்த வகையில் தான் பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு இன்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது 75 வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்றும்படி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

2 நாள் வீடுகளில் தேசியக்கொடி
இந்த ஆண்டு நாம் 'அசாதி கா அம்ரித் மோட்சாவ்' நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதை ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி) இயக்கமாக மாற்றி வலுப்படுத்த வேண்டும். இதனால் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுங்கள். இந்த இயக்கம் தேசியக்கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும்'' என கூறியுள்ளார்.

பூஸ்டர் டோஸ் அறிவிப்பு
முன்னதாக 75 வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டில் 18 வயது முதல் 59 வயதுக்குள்ளான பொதுமக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசம் என்ற அறிவிப்பு கடந்தவாரம் வெளியானது. இதன்மூலம் பொதுமக்கள் செப்டம்பர் 28 வரை இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அரசு மருத்துவமனை, முகாம்களில் செலுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications