விஜயவாடா கொரோனா தனிமைப்படுத்துதல் மைய தீ விபத்தில் 11 பேர் பலி- பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்
டெல்லி: ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் தீவிபத்தில் இறந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
Recommended Video
ஆந்திராவில் விஜயவாடாவில் உள்ளது சொர்ணா பேலஸ் எனும் நட்சத்திர ஹோட்டல். ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாலும் மருத்துவமனைகளிலும் இடமில்லாததாலும் இந்த ஹோட்டலை கொரோனா தனிமை மையமாக மாற்றினர்.

இங்கு 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தங்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகிவிட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தீயணைப்பு துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார். மேலும் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் விஜயவாடாவில் கொரோனா தனிமை மையத்தில் தீவிபத்தை அறிந்து வேதனை அடைந்துள்ளேன்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் தீவிபத்து சம்பவம் குறித்து கேட்டறிந்தேன். இந்த இக்கட்டான நேரத்தில் மத்திய அரசு ஆதரவாக இருக்கும் என்பதை உறுதியளித்துள்ளேன் என்றார்.

அது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்த சம்பவம் தொடர்பாக இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் விஜயவாடாவில் கொரோனா தடுப்பு மையத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்த செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன்.
மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைந்து நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார் அமித்ஷா.
-
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications