சாதிச்சிட்டாரு.. மன்கீ பாத் உரையில் சென்னை இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி.. ஏன் தெரியுமா?
டெல்லி: ஏரி, குளங்களை தூய்மைப்படுத்தும் சேவையில் ஈடுபட்டு வரும் சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்திக்கு 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் இன்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்தியாவின் 400 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதி இலக்கு எட்டப்பட்டது குறித்தும் அவர் பெருமையாக கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி 2014 முதல் ‛மன் கீ பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மக்களில் சேவையை அவர் பாராட்டுவதுன், நாட்டின் திட்டங்கள், சாதனைகள் குறித்து அவர் எடுத்து கூறி வருவதை பிரதமர் நரேந்திர மோடி வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இன்று மன்கீ பாத் நிகழ்ச்சி
இந்த மாதத்துக்கான நிகழ்ச்சியில்(மொத்தம் 87 வது நிகழ்ச்சி) இன்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 5 மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் இது அதிக கவனம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் வழக்கம்போல் பல்வேறு அம்சங்கள் குறித்து நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஏற்றுமதியில் சாதனை
நான் பேசுவது பொருளாதாரம் தொடர்பான விஷயமாக இருக்கலாம். ஆனால் இது பொருளாதாரம் என்பதை விட இந்திய நாட்டின் செயல்திறனுடன் தொடர்புடையதாகும். ஒரு காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 100 மில்லியனாகவும், 150 மில்லியனாகவும் மட்டுமே இருந்தது. சில சமயங்களில் 200 பில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனால் இன்று இந்தியா 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கான ஏற்றுமதி இலக்கை பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளது.

விடா முயற்சியே வெற்றி
ஒரு செயலுக்கான கனவை விட அதை செயல்படுத்துவது என்பது தான் மிக முக்கியமானதாக இருக்கும். தேச முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இரவு, பகல் பாராமல் நேர்மையான முயற்சியில் ஒரு செயலை செய்யும்போது அது நல்ல பலன்களை கொடுக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இதுதான் நடக்கிறது. ஒருவரின் மன உறுதியும், விடா முயற்சியும் தான் அவருடைய கனவை நனவாக்கி வெற்றியை பெற்று கொடுக்கும்.

தமிழகத்தின் வாழைப்பழங்கள்
இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அசாம் மாநிலம் ஹைலகண்டியில் இருந்து தோல் பொருட்கள், உஸ்மானாபாத்தில் இருந்து கைத்தறி பொருட்கள், கர்நாடக மாநிலம் பிஜாப்பூரில் இருந்து பழங்கள், காய்கறிகள், உத்தர பிரதேசம் மாநிலம் சந்தவ்லியில் இருந்து கருப்பு அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதிகள் அதிகரித்து வருகின்றன. லடாக்கின் வாதுமை, தமிழகத்தின் வாழைப்பழங்களை துபாயிலும், சவுதி அரேபியாவிலும் நீங்கள் காணலாம்.

மாம்பழம், பலாப்பழம்
இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்டின் தினைகள் டென்மார்க்குக்கும், ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் இருந்து பைங்கனப்பள்ளி மற்றும் சுபர்ணரேகா மாம்பழங்கள் தென்கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. திரிபுராவில் இருந்து புதிய பலாப்பழங்கள் விமானம் மூலம் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, முதல் முறையாக நாகாலாந்தில் இருந்து கிங்சில்லி எனும் மிளகாய் ரகம் லண்டனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து கென்யா மற்றும் இலங்கைக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது.

கடின உழைப்பால்...
இந்தியாவை ஒவ்வொரு விவசாயி, கைவினை கலைஞர்கள், நெசவாளர்கள், பொறியாளர்கள், தொழில்முனைவோர்கள் கடின உழைப்பால் வலுப்படுத்துகின்றனர். இவர்களின் உழைப்பால் தான் 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வெளிநாடுகளுக்கு பல்வேறு வணிக பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இலக்கு எட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியனும் சொந்தஊருக்காக குரல் கொடுக்கும்போது அது உலக தரத்துக்கு மாற அதிக நேரம் எடுக்காது.

ஆத்ம நிர்பர் பாரத்
GeM இணையதளம் மூலம் கடந்த ஓராண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான பொருட்கள்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 1.25 லட்சம் சிறு தொழில்முனைவோர் நேரிடையாக அரசுக்கு தங்கள் பொருட்களை விற்பனை செய்து பங்களிப்பு செய்துள்ளனர். இப்போது சிறிய கடைக்காரர்கள் கூட ஒருவரின் பொருட்களை அரசாங்கத்திற்கு GeM இணையதளம் மூலம் விற்கலாம். இதுதான் புதிய இந்தியாவாகும். இதனால் இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து தன்னம்பிக்கையுடன் உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கான ‛ ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்தின் கனவை நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும்'' என கூறினார்.

சென்னை சேர்ந்தவருக்கு பாராட்டு
இந்த நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛சென்னையை சேர்ந்த நண்பர் அருண் கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது பகுதியில் உள்ள குளங்களையும், ஏரிகளையும் தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் 150க்கும் மேற்பட்ட குளங்கள், ஏரிகளில் மாசுகளை அகற்றும் கடமைகளை மேற்கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்'' என அவரை குறிப்பிட்டு பாராட்டுக்கள் தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications