சமரசத்திற்கு இடமில்லை... முப்படைகளும் நவீனமயமாக்கப்படும்... பிரதமர் மோடி நறுக் பேச்சு
டெல்லி: நாட்டின் பாதுகாப்பில் மத்திய அரசு எந்த சமரசமும் செய்யாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சர்வதேச அளவில் போர் களச்சூழல் மாறி உள்ளதால் அதற்கு ஏற்ப இந்திய முப்படைகளும் நவீனமயமாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 20 வது ஆண்டு விழா டெல்லி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, கார்கில் போரின் வெற்றி எந்த தனிப்பட்ட அரசுக்கும் சொந்தமானது அல்ல, அது நாட்டின் வெற்றி என்றார். நாட்டின் பாதுகாப்பில் மத்திய அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும், விண்வெளி போரிலும் நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சர்வதேச அளவில் போர்க்கள சூழல் மாறி உள்ளதால் பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்துவதை மத்திய அரசு தலையாய நோக்கமாக கொண்டுள்ளது என்றார்.
கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு படைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாகவும், நாட்டுக்காக இன்னுயிரை தந்த வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், உயர்த்தப்பட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
-
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில்












Click it and Unblock the Notifications