மன் கீ பாத் நிகழ்ச்சி.. திருப்பூரில் இளநீர் விற்கும் பெண் வியாபாரிக்கு பிரதமர் மோடி பாராட்டு
டெல்லி: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியின் கட்டமைப்புக்கு ரூ 1 லட்சம் நன்கொடையாக கொடுத்த திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள இளநீர் வியாபாரி தாயம்மாவை மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
Recommended Video
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நாள் முதல் மன் கீ பாத் எனும் மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.
இதன் முதல் நிகழ்ச்சி அக்டோபர் 3, 2014 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அப்போது தூய்மை இந்தியா திட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அது போல் கடந்த ஆண்டின் கடைசி நிகழ்ச்சி டிசம்பர் 26ஆம் தேதி நிகழ்ந்தது.

85 ஆவது நிகழ்ச்சி
அன்றைய தினம் கொரோனா வைரஸ் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி பேசியிருந்தார். அந்த வகையில் இந்த மாதத்திற்கான மன் கீ பாத் நிகழ்ச்சி இன்று காலை 11. 30 மணிக்கு தொடங்கியது. இது 85 ஆவது நிகழ்ச்சியாகும். இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.

சிறப்பு ஏற்பாடுகள்
இதனால் இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் உள்ள மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக பாஜக பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இன்று காந்தியடிகளின் நினைவு தினம் என்பதால் டெல்லியில் ராஜ்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு மனதின் குரல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கினார்.

வீரமரணமடைந்தவர்கள்
அவர் தனது உரையில் இந்தியா கேட் அருகே உள்ள அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவு சுடர் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த உணர்வுபூர்வமான தருணத்தில் நிறைய பேர் தனது குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு வீரமரணம் அடைந்துள்ளனர். தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அமர் ஜவான் ஜோதி வீரமரணமடைந்த வீரர்களுக்கு சிறந்த மரியாதை என பல தியாகிகள் எனக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

போர் நினைவிடங்கள்
எனவே விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் போர் நினைவிடங்களுக்கு செல்லுங்கள். பத்ம விருதுகள், பிரதமரின் பால புரஸ்கார் விருதுகளுக்குத் தேர்வான அனைவருக்கும் பாராட்டுகள். பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்கள் நாட்டின் போற்றப்படாத நாயகர்கள். 1 கோடிக்கு மேற்பட்ட குழந்தைகள் அவர்கள் நடத்திய மன் கீ பாத் நிகழ்ச்சியை எனக்கு போஸ்கார்டில் அனுப்பினர்.

திருப்பூர் தாயம்மாள்
இந்தியாவின் பல்வேறு நாடுகள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் இந்த போஸ்ட் கார்டுகள் வந்துள்ளன. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இளநீர் வியாபாரம் செய்யும் தாயம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். வறுமையில் வாடும் நிலையிலும் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியின் கட்டமைப்புக்கு ரூ 1 லட்சம் நன்கொடை அளித்தார். இதை செய்ய அவருக்கு மிகப் பெரிய மனம் வேண்டும்.

தடுப்பூசி மீது நம்பிக்கை
இந்தியாவில் கொரோனா 3ஆவது அலையை வெற்றிக் கரமாக எதிர்த்து வருகிறோம். 15 முதல் 18 வயதுக்குள்பட்டவர்களில் 4.5 கோடி குழந்தைகள் தடுப்பூசி எடுத்துக் கொண்டது பெருமையாக இருக்கிறது. கொரோனா தடுப்பூசியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மிகப் பெரிய பலமாக விளங்குகிறது. கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. இது நல்ல அறிகுறியாகும் என்றார் பிரதமர் மோடி
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications