மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..? வடகிழக்கு மாநில முதல்வர்களுடன்.. பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை
டெல்லி: கொரோனா பரவல் தொடர்பாக வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாட்டில் கொரோனா 2ஆம் அலை மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் நான்கு லட்சம் வரைகூட சென்ற வைரஸ் பாதிப்பு இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 37,154 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், நாட்டில் கொரோனா 2ஆம் அலை இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை என்றும் சில மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு இன்னும் அதிகமாகவே உள்ளதாக ஆய்வாளர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். வீடியோ கான்பரன்சிங் முறையில் நாளை காலை 11 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மிசோரம் ஆகிய எட்டு மாநில முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மணிப்பூர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் பல மாவட்டங்களின் பாசிட்டிவ் விகிதம் இன்னும்கூட அதிகமாகவே உள்ளது. கடந்த வாரம், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலையை ஆய்வு செய்திருந்தார்.
மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்புக் குழுக்களையும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications