Tasmac: நைட் 10 மணிக்கு டாஸ்மாக் பார் மூடியாச்சா? போட்டோ எடுத்து அனுப்ப விஜய் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் மதுபானக் கடைகள் இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும் என்ற உத்தரவு இருக்கும் நிலையிலும் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதாக புகார்கள் வருகின்றன. எனவே இனி இரவு 10 மணிக்கு மேல் பார் மூடப்படும் புகைப்படத்தை எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மதுப் பழக்கத்தினால் ஏற்படும் குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூகப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.

இந்தச் சூழலில், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற இரண்டாவது நாளிலேயே மது விலக்கு தொடர்பாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார் முதல்வர் விஜய்.
மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகள்: முழு விவரம்பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:கல்வி நிறுவனங்களின் 500 மீட்டர் சுற்றளவுக்குள் இருந்தவை186, வழிபாட்டுத் தலங்களின் 500 மீட்டர் சுற்றளவுக்குள் இருந்தவை276, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் இருந்தவை 255, ஆக மொத்தம் 717.
தற்போது இந்த உத்தரவின்படி, குறிப்பிட்ட டாஸ்மாக் கடைகளை மூடும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறும் ஊழியர்கள் மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிரடி சஸ்பெண்ட்: கள்ளச்சந்தையில் மது விற்பனையைத் தடுப்பதில் முதல்வர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, திருவொற்றியூர் காவல் நிலைய எல்லைக்குள் கள்ளச்சந்தை மது விற்பனையைத் தடுக்கத் தவறிய காவல் ஆய்வாளர் (Inspector) மோகன் தாஸ் உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார்.
இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி: தீவிர கண்காணிப்பில் போலீஸ்!தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், சில இடங்களில் 10 மணிக்கு மேல் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, முதல்வர் விஜய் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
24 மணி நேர ரோந்து: ஒவ்வொரு மண்டலத்திலும் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மறைமுகக் கண்காணிப்பு: கள்ளச்சந்தையில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய, போலீஸார் சாதாரண உடையில் (Plain Clothes) ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.டிஜிட்டல் ஆதாரம்: பூட்டப்பட்ட பார்களின் (Bars) புகைப்படங்களை எடுத்து, அதை உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உறுதி செய்ய வேண்டும் எனவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications